எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் – இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 94 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் கடந்த நான்கு சீசன்களை விட அதிக போட்டியாளர்களை கொண்டு மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இதில் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேஷனில் இருந்து வெளியேறி தற்போது 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். ஆம் ராஜி, சிபி, அமீர், பிரியங்கா, தாமரைச்செல்வி, நிரூப் மற்றும் பாவணி ஆகியவர்கள் உள்ளனர்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதில் டிக்கெட் டு பினாலே  டாஸ்கில் வெற்றிபெற்று முதல் பினலிஸ்ட் ஆக அமீர் ஆகியுள்ளார்.

மேலும்  பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டம் என்பதால் நேற்று 3 லட்சம்  பணம் உள்ள பெட்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து இதனை போட்டியாளர்கள் யார் வேண்டுமானாலும்  எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என கூறியுள்ளனர். அதனையடுத்து போட்டியாளர்கள் பலரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டு வந்தனர்களே தவிர யாரும் பெட்டியை எடுக்கவில்லை

மேலும் பணத்தின் மதிப்பு கூடிக்கொண்டே 7 லட்சம் வரை சென்றுள்ளது. இதனையடுத்து இன்று வந்த மூன்றாவது ப்ரோவில் பிக்பாஸில் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உள்ளனர் இதனை அடுத்து பணம் வாய்ப்பை யாரும் எடுத்துச் செல்லவில்லை என தெரியவருகிறது. இந்த நிலையில் தற்போது மக்களிடையே இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது என்ற குழப்பம் உள்ளன.

அதில் மக்களின் வாக்குகளின் படி குறைந்த ஓட்டுகளை பெற்று பாவணி மற்றும் தாமரை கடைசி இடத்தில் உள்ளனர் ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் அல்லது டபுள் எவிக்ஷன் நடந்து இவர்கள் இருவருமே வெளியேற கூட வாய்ப்பு அதிகம் உள்ளது.

Leave a Comment