எல்லோருக்கும் தங்கம், வைரம் மேல் தான் ஆசையா இருக்கும் – எனக்கு இதுதான் ஆசை.! மனம்திறந்த பிரியங்கா சோப்ரா.

மாடலிங் துறையில் இருந்து வந்த நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி திறமை என காட்டி வலம் வருகின்றனர் ஆனால் இதை முன்பே செய்து காட்டி தற்பொழுது ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் உடன் கை கோர்த்தது “தமிழன்” என்ற திரைப்படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமாவையும் தாண்டி பிரியங்கா சோப்ரா 2000 ஆண்டு உலக அழகி என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகுதான் அவருக்கு சினிமாவுலகில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன அதிலும் இந்தியில் சொல்லவே வேண்டாம் இவர் ஆரம்பத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் உடன் கை கொடுத்தார் போதாத குறைக்கு இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்தது தவிர்க்க முடியாத நாயகியாக விஸ்வரூபம் எடுத்தார்.

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியையும் தாராளமாக அளிக்காட்ட கூடிய நடிகைகளில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இருந்தார். இப்படி ஓடி கொண்டிருந்த இவர் ஹாலிவுட்டில் பிரபல பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பக்கம் சென்றார் தற்பொழுது அங்கு படங்களில் கைப்பற்றி நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது எனக்கு ஷூ பைத்தியம். மற்றவர்கள் போல தங்க நகை, வைரம் என குவித்து வைத்திருப்பார்கள் ஆனால் எனக்கு ஷூ தான் ஆசை. எங்கு சென்றாலும் அங்கு ஷூ வாங்க தான் நினைப்பேன் நான் பல்வேறு ஷூகளை தயாரித்து வருகிறேன் எனக்கூறினார் இதுவரை பிரியங்கா சோப்ராவிடம் 100க்கும் மேற்பட்ட ஷூ இருக்கிறதாம் வீட்டில் இதற்கென ஒரு தனி அறையை செட் செய்து உள்ளார் பிரியங்கா.

Leave a Comment

Exit mobile version