இப்போ பல கோடி சம்பளம் வாங்கினாலும் நான் முதல் முதலாக வாங்கிய சம்பளம் இதுதான்..! கண்கலங்க வைத்த நடிகர் பிரபுதேவா..!

தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர்தான் நடிகர் பிரபுதேவா. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துள்ளார்.

அந்தவகையில் ஆரம்ப காலத்தில் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல கதையம்சம் உள்ள படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இவருடைய நடிப்பு மற்றும் நடனத்தை பார்த்து பல்வேறு ரசிகர்களும் வியந்தார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தற்போது இவர் சமீபத்தில் பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் இணையத்தில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா பகீரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பிரபுதேவா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு உண்மை சம்பவங்களை பற்றி விரிவாக பேசியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதை கலங்க வைத்துள்ளார்.

அதாவது நடிகர் பிரபுதேவா மிகவும் ஒல்லியாக இருப்பது மட்டுமில்லாமல் அவரை தாடி இல்லாமல் பார்த்தால் பார்க்கவே முடியாது என்பதுதான் உண்மை அந்த வகையில்  திரையுலகில் அறிமுகமான பொழுது பல பிரபலங்களும் இவரை கிண்டல் செய்து உள்ளார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர் திரை உலகில் அறிமுகம் ஆன பொழுது நான் வாங்கிய முதல் சம்பளம் குறித்து பேசியுள்ளார். அந்தவகையில் நடிகர் பிரபுதேவா திரை உலகில் முதன்முதலாக 500 ரூபாய் சம்பளத்தை பெற்றுள்ளார்  இதனை இயக்குனர் மணிரத்னம் தான் தனது கையால் கொடுத்தால் என்பதையும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

Leave a Comment