அந்த பையன் கூட படம் பண்ணாதீங்கன்னு சொன்னாங்க.. மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் “விஷால்” உடைத்த உண்மை

Mark Antony Success Meet : மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இந்த நிலையில் மார்க் ஆண்டனி டீம் வெற்றி விழாவை சென்னையில் நடத்தியது. இதில் விஷால், எஸ் ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி, விஷ்ணு பிரியா, காந்தி என பலர் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய விஷால்..

முதலில் விஜய் ஆண்டனி மகள் இறப்பு குறித்து பேசினார் நான் எப்பொழுதும் விஜய் ஆண்டனியை “ராஜா” என்று தான் கூப்பிடுவேன் ஹைதராபாத்தில் இருக்கும் பொழுது நான், எஸ் ஜே சூர்யா சார், ஆதிக் ரவிச்சந்திரன் எல்லோரும் விஜய் ஆண்டனிக்கு நடந்த பேரிழப்பு குறித்து பேசினோம் நமக்கே மனசு இந்த அளவிற்கு கனமாக இருக்கிறது.

அவரும் அவரது குடும்பமும் எப்படி இதை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று மிகுந்த வருத்தப்பட்டோம் கடவுள் அவர்கள் குடும்பத்திற்கு பக்கபாலமாக இருக்க வேண்டும் ஒரு இழப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல அதில் இருந்து மீண்டு வருவதற்கு நீண்ட நாட்களாகவும் விஜய் ஆண்டனி மட்டுமல்ல அவர் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் கடவுள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியை கொடுக்க வேண்டும்.

வாழ்க்கை முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்கபலமாக நான் இருப்பேன் என கூறினார் மேலும் பேசிய அவர்  மார்க் ஆண்டனி வெற்றியடையும் என்று எல்லோரும் சொன்னார்கள் ஆதிக் இனிமேல் தயவுசெய்து கடிதம் மட்டும் எழுத வேண்டாம் உன் மேல் உள்ள நம்பிக்கையில் அடுத்த படங்கள் பண்ணுவதற்கு நான் டேட் கேட்பேன்.

vishal
vishal

ஆதிக் உடன் படம் பண்றேன்னு சொன்னப்ப நிறைய பேர் அவன் கூட ஏன் படம் பண்றீங்க என்றுதான் கேட்டாங்க எனக்கு கன்டன்ட் பிடிச்சிருக்கு அந்த தம்பி மேல நம்பிக்கை இருக்கு.. கரெக்டா பண்ணிடுவார்னு சொன்னேன் என்னிடம் அப்படி கேட்ட அதே ஆட்கள் தான் இப்போ கால் பண்ணி படம் நன்றாக இருக்கிறது ஆதிக் ரவிச்சந்திரன் நன்றாக இயக்கிய உள்ளார் என கூறினார்கள்.

தற்பொழுது நிறைய ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு கால் பண்ணி அடுத்த டேட் கொடுங்கள் என்று சொல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது அது தான் சினிமா உலகம் எங்களை வாழ வைக்கிற மக்கள் ஆகிய உங்களுக்கு நன்றி. அதிக் பொருத்தவரை அவனுக்கு இதுதான் முதல் படம் மாதிரி..

இனிமேல் தான் அவன்னோட பயணம் ஆரம்பிக்க போகுது எஸ்.ஜே. சூர்யா சாருக்கு மூன்று பக்கத்துக்கு டயலாக் உங்களுக்கு இந்த சீன்ல டயலாக் இல்லை என தயங்கி கொண்டு தான் சொல்வான். அதெல்லாம் பிரச்சனையே கிடையாது நான் தான் கைதட்டல் வாங்கணும் என்கின்ற அவசியம் கிடையாது எல்லோரும் கைத்தட்டல் வாங்கணும் அதுதான் முக்கியம் என தெரிவித்தார்.