லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நாங்க சொல்றது தான் இங்க சட்டம்..! நயன்தாராவுக்கு ஸ்கெட்ச் போட்ட தியேட்டர் உரிமையாளர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகை தான் நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆரம்பத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்த நயன்தாரா தற்பொழுது கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் மட்டுமே நடிக்க முன் வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய அளவு ஹிட்டு அடித்து வசூலில் சாதனைப்படுத்தும் வருகிறது அந்த வகையில் சமீபத்தில் நடித்த மாயா திரைப்படத்தின் அதே கூட்டணியில் மற்றொரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சரவணன் இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு கனேக்ட் என பெயரிடப்பட்டது இந்த திரைப்படத்தில் ட்ரெய்லர் வெளிவந்த நாளில் ரசிகர்களின் பார்வையை பெருமளவு கவர்ந்தது மட்டுமில்லாமல் படம் பார்ப்பதற்கு ஹாலிவுட் போன்று இடைவெளி இல்லாமல் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது.

இதுவே இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் நயன்தாராவின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் தற்பொழுது ஆப்பு வைக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை தாண்டி அதிகம் சம்பாதிப்பது இடைவெளி உள்ள அந்த 99 நிமிடம் மட்டுமே ஆகையால் படம் கண்டிப்பாக இடைவெளியுடன் தான் வெளியாக வேண்டும் என கூறியிருந்தார்கள்.

அப்படி நீங்கள் சம்மதிக்கா விட்டால் தியேட்டரில் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என தியேட்டர் உரிமையாளர்கள் பேசி விட்டார்களாம் இதனால் நயன்தாரா அவர்கள் இந்த திரைப்படத்தில் 59 வது நிமிடத்தில் இடைவெளி வரும் படி மாற்றம் செய்து உள்ளார்களாம். மேலும் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தான் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், வினை போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவமே இந்த திரைப்படத்தின் கதை.

Leave a Comment