குணசேகரன் முன்னாள் காதலியிடம் உதவி கேட்கும் ஜனனி.. ஞானத்தை கிழித்து தொங்கவிட்ட தர்ஷன்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் அப்பத்தாவை கொன்ற குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஜனனி, சக்தி முயற்சி செய்து வருகின்றனர். போலீஸ் ஜீவானந்தம் தான் அப்பத்தாவை கொலை செய்ததாக கூறி கைது செய்துள்ளனர்.

எனவே எப்படியாவது ஜீவானந்தத்தை ஜெயிலில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் என்பதற்காக சக்தி, ஜனனி முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் குணசேகரன் அப்பத்தாவின் 40% சொத்தை கைப்பற்றுவதற்கான வேலையில் இறங்கி உள்ளார். மேலும் எஸ்கேஆர் அப்பதாவை ஜீவானந்தம் கொள்ளவில்லை என்று குணசேகரனுக்கு ட்விஸ்ட் வைத்துள்ளார்.

நான் ஒன்னும் லேசுபட்ட ஆள் கிடையாது.. விஜயுடன் நடனமாடிய பிக்பாஸ் விசித்ரா – எந்த படத்தில் தெரியுமா.?

அப்பத்தா உயிருடன் தான் இருக்கிறாரா? இல்லை உண்மையாகவே இறந்து விட்டாரா? என்பது தெரியாத புதிராகவே இருந்து வருகிறது. அப்பத்தா உயிருடன் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்த தப்பும் செய்யாத ஜீவானந்தம் இந்த பிரச்சனையில் சிக்கிக்கொண்டார்.

மறுபுறம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் கணவனின் பேச்சை கேட்கவில்லை என்றால் பிள்ளைகளும் அதேபோல் வளர்கிறது. அதாவது தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தத்தை போலீஸ் கோர்ட்டுக்கு கொண்டு வர ஜனனி ஜீவானந்தத்திடம் அப்பத்தாவுக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சி யோசிச்சி பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கு சார் என்று சொல்ல அதற்கு ஜீவானந்தம் நீங்க அப்பத்தாவை பத்தி எதுவும் யோசிக்காதீங்க அவங்களோட கனவை எப்படி நிறைவேத்தனும் என்பதை மட்டும் யோசிங்க என்று சொல்கிறார்.

கடன் சொல்லி பொருளை வாங்கி நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்துற.. பாக்கியா மீது கோபப்படும் கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

இதனை அடுத்து ஞானம் தர்ஷனிடம் எல்லாரையும் மீறி போனா என்னடா அர்த்தம் என்ன எல்லாருக்கும் துணிஞ்சிட்டாங்களோ என்று கேட்கிறார் இதற்கு தர்ஷன் அவங்க மட்டும் இல்ல நாங்க எல்லாருமே துணிச்சிட்டோம் உங்களால் ஆனதை பார்த்துக்கோங்க என்று திமிராக பேசுகிறார். இதனை அடுத்து குணசேகரனின் முன்னாள் காதலியும் எஸ்கேஆரின் மனைவியிடம் ஜனனி ஞாயமா வாதாடுறவங்க அதுக்கு உங்களை விட பெட்டர் பர்சன் கிடைப்பாங்களான்னு தெரியல என்று உதவி கேட்கிறார்.