வெளியே வந்து ஆட்டத்தை ஆரம்பித்த வேலராமமூர்த்தி.! சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்..

Ethirneechal serial today promo: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் வேல ராகமூர்த்தி படப்பிடிப்பிற்காக சீரியலில் இருந்து விலகிய நிலையில் இதனையடுத்து மீண்டும் எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது.

அதாவது மருமகள்கள் அனைவரும் தங்களுடைய கணவர்களை எதிர்த்து பேசிவிட்டு தைரியமாக இருப்பதனால் அடங்கி ஒடுங்கி கடந்த மனைவிகள் தற்பொழுது இப்படி எதிர்த்து பேசுகிறார்களே என்ற கோபத்தில் கதிர், ஞானம் மற்றும் ஆதி குணசேகரன் இருந்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளும் இவர்களுக்கு எதிராக இருந்து வருகிறது.

இந்நிலையில் அப்பத்தாவின் 40% சொத்தை கைப்பற்றி விட வேண்டும் என கதிர் பல முயற்சிகளை செய்து வருகிறார். எனவே கில்லியை வைத்து அப்பத்தாவை போட்டு தள்ள முடிவு செய்துள்ளார். அதேபோல் ஜீவானந்தம் தானாக சிக்க போவதனால் இவரையும் அடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இவ்வாறு பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்பொழுது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஜான்சி ராணி வாயிலிருந்த வெற்றிலையை எடுத்து ரோட்டில் தூக்கி போடுகிறார். எனவே ரோட்டில் தூக்கி போடுற என்று ரேணுகா கேட்க வேறு எங்கடி தூக்கி போடுறது என்று சொல்ல மருமகள்கள் கோபப்படுகின்றனர்.

பிறகு கதிர் ஒரு பெண்ணுடன் போனில் சிரித்து பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் கரிகாலன் டைம் ஆனா பிளான் டைவட் ஆகிடும் மாமா என்று கூற அது எல்லாம் எனக்கு தெரியும் பொத்திகிட்டு போ என கரிகாலனை அனுப்பி வைக்கிறார். மறுபுறம் வீட்டிற்கு வந்திருக்கும் குணசேகரன் தனது மகனிடம் என்னைக்கு உங்க ஆத்தா பேச்ச கேக்க ஆரம்பிச்சியோ அன்னைக்கே உன் புத்தி வீணா போயிடுச்சு என்று சொல்ல என்னடா இவன் இப்படி முழிக்கிறான் என்று கேட்கிறார். அதற்கு ஞானம் அவன் முழிக்கல அண்ண முறைக்கிறான் என்று சொல்ல அதற்கு முறைக்கிறான்ல வளர்ப்பு அப்படி என்று சொல்ல மகள் டீ போட்டு எடுத்து வருகிறார்.