ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன்.. கில்லியை வைத்து காய் நகர்த்தும் கதிர்.! மருமகள்களை பாடாயப்படுத்தும் ஜான்சிராணி

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதி குணசேகரன் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்தி தொடர் திரைப்படங்களில் நடித்து வருவதற்கான காரணத்தினால் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்.

எனவே சீரியலில் இருந்து  திடீரென்று காணாமல் போய்விடுகிறார் அப்படி போலீசார்கள் குணசேகரனை அரெஸ்ட் செய்து அழைத்து சென்ற நிலையில் பிறகு எங்கு போனார் என்பதே தெரியவில்லை. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு குணசேகரன் வர விசாலாட்சி, கதிர் மற்றும் ஞானம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

அப்பத்தா தனது 40% சொத்தை யாருக்கு தருகிறேன் என்பதனை விரைவில் நடக்க இருக்கும் ஃபங்ஷனில் கூறுவதாக சொல்ல அனைவரும் இந்த பங்க்ஷனில் கலந்து கொள்வதற்காக ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்த நேரத்தில் கதிர் எப்படியாவது அப்பத்தாவை போட்டு தள்ள வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சக்தி கார் ஓட்ட ஜனனி, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி மற்றும் ஜான்சி ராணி அனைவரும் ஒரே காரில் செல்கின்றனர். ஜான்சிராணி செய்யும் அட்டகாசம் தாங்க முடியாமல் காரில் இருந்து இறக்கிவிட்டு வேகமாக அனைவரும் சென்று விடுகின்றனர். ஜான்சி ராணியும் கார் பின்னாடியே ஓடி வரவும் ப்ரோமோ குறித்து முன்பே பார்த்தோம்.

இதனை அடுத்த தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜான்சி ராணி ஓவராக பேச நந்தினி இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்போம் என்று சொல்ல இதற்கு ஜான்சி ராணி ஏய் இது எங்க அண்ணனோட காரு நீங்க எல்லாம் இறங்குங்கடி எனக் கூற மருமகள்கள் அனைவரும் கடுப்பாகின்றனர்.

பிறகு கதிர், ஞானம், கரிகாலன் மற்றும் கில்லி ஆகியோர்கள் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கில்லி தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க என்று கதிரை கூற அதற்கு கதிர் எது தேவ தேவை இல்லைன்னு எனக்கு தெரியும் நான் சொன்னது மட்டும் செய் என்று சொல்கிறார்.

மறுபுறம் மருமகள்களின் அப்பா அனைவரும் வீட்டிற்கு வந்திருக்க குணசேகரன், விசாலாட்சி இடம் அப்பத்தா வர சொன்னாங்க அதான் வந்திருக்கோம் என்று சொல்கிறார்கள் இதற்கு குணசேகரன் அப்பத்தா சொன்னா வந்துடுவீங்களா வாங்க வாங்க அங்க என்ன நடக்குதுன்னு நீங்களும் பாக்கணும்ல என்று கூறுகிறார்.