கரிகாலனை கன் பாய்ண்டில் பிடித்த கில்லி.. சக்தியை வேலைக்காரன் என்று அசிங்கப்படுத்தும் ஜான்சி ராணி

Ethirneechal serial today promo 1: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது அப்பத்தா தனக்காக இருக்கும் 40% சொத்தை யாருக்கு தருகிறேன் என்ற முடிவை பங்க்ஷனில் கூறுவதாக கூறியிருப்பதனால் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

எனவே இதற்காக குடும்பத்தினர்கள் அனைவரும் கிராமத்துக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் குணசேகரன் எங்கு போயிருக்கிறார் என்பது தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். மேலும் குணசேகரன் சொன்னது போலவே அப்பத்தாவை பிசிறு தட்டாமல் முடித்துவிட வேண்டும் என கதிர் ஒரு முடிவோடு இருக்கிறார்.

அதேபோல் ஜீவானந்தத்தையும் பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார் மறுபுறம் ஜனனி புதிதாக பிசினஸ் ஆரம்பித்திருக்கும் நிலையில் அதற்கு புதிதாக பிரச்சினைகளும் வந்து கொண்டிருக்கிறது. பிறகு வீட்டில் இருக்கும் மருமகளுக்கு விசாலாட்சியின் மூலம் ஜான்சிராணி குடைச்சல் கொடுத்து வருகிறார்m

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் கிளம்பி அமர்ந்திருக்க ஜான்சிராணி விசாலாட்சியிடம் உங்க சின்ன மகனை வேலைக்காரன் மாதிரி தான் வச்சிருக்காங்க இப்ப பாருங்க டிரைவரா ஆகிடாலுங்க என பேசிக் கொண்டிருக்க மருமகள்கள் கடுப்பாகிறார்கள்.

பிறகு ரவுடி கில்லி கரிகாலன் நெத்தியில் துப்பாக்கியை வைக்க ஏன்யா இதுக்கலாமயா துப்பாக்கி எடுப்பாங்க எனக் கூற கதிர் ஓடி வருகிறார். யோவ் கதிர் மாமா என்று கூப்பிட பிறகு எனக்கு கல்யாணம் முடிஞ்ச இன்னும் ஃபர்ஸ்ட் நைட் கூட நடக்கவில்லையா என்று சொல்கிறார் உடனே கதிர் யோவ் கில்லி என கூப்பிட்டுக்கொண்டே வேகமாக ஓடி வருகிறார். ஈஸ்வரி நின்று கொண்டிருப்பதை பார்த்து ஜனனி காரில் இருந்து இறங்கி என்ன ஆச்சு அக்கா என்று கேட்க இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.