எனக்கு இருக்கிற தில்லு ஈஸ்வரி கிட்ட இருக்கா.? குணசேகரனை அவமானப்படுத்தும் சாருபாலா.!

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்புங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதாவது அப்பத்தாவின் சொத்துக்கு ஆசைப்பட்ட குணசேகரன் கொலை செய்து விட்டு எதுவுமே தெரியாதது போல் நடித்து வருகிறார்.

ஆனால் ஜனனி சக்திக்கு குணசேகரன் மீது சந்தேகம் வந்ததால் மீண்டும் கேஷை எடுத்து அப்பத்தாவின் கொலைக்கு யார் சம்பந்தமானவர் என்பதை தேட ஆரம்பித்துள்ளனர் இதற்கு ஜனனிக்கு உதவியாக சாருபாலா உள்ளார். குணசேகரன் ஈஸ்வரியை வேலைக்கு போகக்கூடாது என கூறிவந்த நிலையில் ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு சென்று பிரச்சனை செய்ததால் ஈஸ்வரி வேலையில் இருந்து நின்றுள்ளார்.

ஒரே தட்டில் சாப்பாடு.. அண்ணன் தம்பி போல் பழகிய நடிகரை கடைசி நேரத்தில் பார்க்காமல் போன எம் ஜி ஆர்

இவ்வாறு மருமகள் யாரும் முன்னேறக்கூடாது என்பதில் குணசேகரன் உறுதியாக இருந்து வருவதனால் இவர்கள் என்ன செய்தாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார். அப்படி பிசினஸில் குணசேகரன் மற்றும் எஸ்.கே.ஆர் குடும்பத்தினருக்கு இடையே பிரச்சனை வந்த நிலையில் தற்போது எலக்சன் நடைபெற உள்ளது.

அந்த எலக்ஷனில் எஸ்.கே.ஆரின் மனைவியும் குணசேகரனின் முன்னாள் காதலியுமான சாருபாலா நிற்கிறார். எனவே சாருபாவிற்கு எதிராக குணசேகரன் ஈஸ்வரியை நிற்க வைக்க முடிவு செய்துள்ளார். அப்படி தற்பொழுது வெளியாக இருக்கும் இன்றைய ப்ரோபோவில் நாமினேஷன் செய்ய ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு குணசேகரன், கதிர், ஜனனி என அனைவரும் செல்ல அப்பொழுது சாருபாலா யாருடைய  நிர்பந்தமும் இல்லாமல் இந்த தேர்தலில் நான் நிக்க போறேன் இதே மாதிரி என்னை எதிர்த்து நிற்கிற ஈஸ்வரியால சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.

விஷ்ணு, அர்ச்சனா இடையே மோதல்.. கதி கலங்கிய ஹவுஸ் மேட்ஸ் – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

உன் தம்பி எங்க விஷயத்துல குறுக்க வந்ததனால் தான் கால ஒடச்சேன் என்று கதிர் கூறுகிறார். இதற்கு எஸ்.கே.ஆரின் தம்பி அதற்கு காரணம் யார் என்று தெரியும் என சொல்ல ஒரு கட்டத்தில் கடுப்பான சக்தி ஓட்டு வாங்குறவங்க ஜெயிக்க போறாங்க அவ்வளவுதான் போய் வேலையை பாருங்க என்று கூறுகிறார்.

Exit mobile version