சரியாக காய் நகர்த்தும் குணசேகரன்.. ஓட்டு கேட்க சென்ற இடத்தில் ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.! எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது யார் எலக்ஷனில் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கதைகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது. குணசேகரனுக்கு சவால்விடும் ஈஸ்வரி இந்த எலக்ஷனில் எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அதேபோல் குணசேகரனும் ஈஸ்வரியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஓட்டிக்காக அனைவருக்கும் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஈஸ்வரி இது மிகவும் தவறு என சொல்ல மேலும் ஈஸ்வரிக்கு ஆதரவாக ஜனனியின் தோழிகளும் களத்தில் இறங்கி உள்ளனர்.

அடேய் அப்ப அண்ணன் தங்கைன்னு சொன்னீங்களே டா.. இப்ப என்னடா கட்டிபிடிச்சு ரொமான்ஸ் பண்றீங்க.. நிக்சன் பூர்ணிமாவை வெளுத்து விடும் நெட்டிசன்கள்..

தற்பொழுது தனக்கு ஓட்டு போடுமாறு ஈஸ்வரி பிரச்சார மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு மக்கள் கேட்கும் சில கேள்விகளால் அதிர்ச்சி அடைகிறார். இதனை அடுத்து குணசேகரன் என்ன பண்ணுனா மக்கள் ஓட்டு போடுவாங்க என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் காய் நகர்த்துகிறார் எனவே குணசேகரனுக்காக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோவில் குணசேகரன் காரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் மறுபுறம் கதிரை பார்த்துக் கொண்டிருக்கும் நந்தினி அனைவரிடமும் அக்கா இதெல்லாம் டிராமா என சொல்ல இதற்கு கதிர் யார் டி நடிக்கிரா என கூற உடனே ஞானமும் புருஷனை பார்க்க சொன்னா டிராமான்னு சொல்றா என எச்சரிக்கிறார்.

பிளான் பண்ணி மாயாவை இருக்க வைக்க ஓட்டிங்கில் நடந்த தில்லுமுல்லு வேலை..? அடப்பாவிங்களா இப்படி எல்லாம் பண்ணுவீங்களா.. ஆதாரத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..

இதனை அடுத்து குணசேகரன் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்பொழுது பழனியப்பா ஏமா இவன் பேசினதெல்லாம் சரியா நீ அனுபவசாலில சொல்லு என கூறுகிறார். பிறகு ஈஸ்வரி ஏராளமான பெண்கள் மற்றும் சக்தி, ஜனனி உடன் பிரச்சாரம் மேற்கொள்ள அங்கு ஜனனி உங்க ஆதரவு நிச்சயமா வேணும் பாட்டி என சொல்ல அதற்கு அந்த பாட்டி உங்களுக்கு ஓட்டு போட்டால் எங்களுக்கு என்ன கொடுப்பீங்க என்று கேட்க அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.