வீட்டிற்க்கே வந்து ஜனனி தான் என் எதிரி எனக் கூறும் பிரபலம்.! குணசேகரனுக்கு குட்டு வைத்த கதிரின் மகள்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது குணசேகரனுக்கு எதிராக குடும்பத்தினர்கள் பலரும் வேலை பார்த்து வரும் நிலையில் சமீபத்தில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வருகிறார். அருணுக்கு ஆக்சிடென்ட் செய்தது எங்க அண்ணன் குணசேகரன் தான் என உண்மையை கூற சாருபாலா குணசேகரனுக்கு எதிராக ஆதிரையை வைத்து காய் நகர்த்த தனது வீட்டிலேயே தங்கமாறு கூறியுள்ளார்.

அதிரையும் எஸ்.கே.ஆர் வீட்டில் இருந்து வரும் நிலையில் இதனால் குணசேகரன், ஞானம் அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர். மறுபுறம் கதிர் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் சாப்பிட கூட முடியாத அளவிற்கு கையில் கட்டு போட்டுள்ளது. எனவே நந்தினி ஊட்டி விட சென்றாலும் கதிர் கோபத்தில் சாப்பிட மறுக்கிறார். பிறகு நந்தினியின் மகள் தாரா பாசமாக கதிருக்கு ஊட்டி விட கதிர் கண் கலங்குகிறார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவரா.? அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

இவ்வாறு இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க இருக்க மறுபுறம் தர்ஷினியை வேறு ஒரு பையனுடன் சேர்த்து வைத்து குணசேகரன் சந்தேகப்பட ஈஸ்வரி அந்த பையனுக்கும் தர்ஷினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்ன பிறகும் குணசேகரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் குணசேகரனிடம் அனைவர் முன்பும் தாரா அப்பா தான் பெருசு இல்லல்ல அப்ப அன்னைக்கு தர்ஷினி அக்கா வேற ஒருத்தவங்கள அப்பா மாதிரின்னு சொல்லும்பொழுது நீங்க ஏன் கோபப்பட்டீங்க பெரியப்பா என்று கேட்க அனைவரும் அதிர்ச்சியாக விசாலாட்சி வாயில் கை வைக்கிறார்.

தோல்வியிலிருந்து மீண்டு வந்த பிரபாஸ்.. சலார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

இதற்கு ஞானம் என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க என சொல்ல அதற்கு ஜனனி அவ கரெக்டாதான கேக்குறா பதில் சொல்லுங்க என சொல்ல குணசேகரன் முறைக்கிறார். இந்த நேரத்தில் புதிதாக ஒரு நபர் வீட்டிற்கு வர ஜனனி எனக்கு எதிரி எனக் கூற இதற்கு உங்க லெவலுக்கு இவள போய் எதிரினு சொல்றீங்களே என குணசேகரன் அசிங்கப்படுத்துகிறார்.

Exit mobile version