கதிருக்கு ஞாயம் கேட்க சென்ற குணசேகரன்.. கரிகாலனை ஓங்கி ஒரு அரை விட்டு பழைய காதலன் வீட்டிற்கு அடைக்கலத்திற்கு சென்ற ஆதிரை..

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது குணசேகரனை அவமானப்படுத்தி சிக்கலில் மாட்ட வைத்துள்ளார் ஆதிரை. அதாவது தற்பொழுது அப்பத்தா இறந்திருக்கும் நிலையில் இதற்கு காரணம் குணசேகரன் கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென சில ரவுடிகள் கதிரை அடித்துள்ளார்கள் எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனது தம்பியை ஆள் வைத்து அடித்தது ஜீவானந்தம் இல்லையென்றால் எஸ்கேஆர் இவர்களில் ஒருவராகத் தான் இருக்க வேண்டும் என குணசேகரன் கூறுகிறார்.

ரகுவரன் நடிப்பை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்துக் கிடந்த விஜய் பட நடிகர்..! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

இதற்கு ஈஸ்வரி ஜீவானந்தம் இதை செய்தார் என எப்படி சொல்றீங்க நீங்கதான் உங்க தம்பியோட ஆள் வச்சி அவரோட மனைவியை கொலை செஞ்சிகளா என கேட்க அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். எனவே இதனை எடுத்து குணசேகரன் எஸ்.கே.ஆர் வீட்டிற்கு சென்று தனது தம்பியை அடித்தது நீங்கதானே என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மறுபுறம் வீட்டில் ஜனனியிடம் ஆதிரை நான் போவதாக கூற அதற்கு ஜான்சிராணி எங்கடி போற என கேட்கிறார். உடனே ஆதிரை பளார் என செவுளில் அறைந்து விட்டு அங்கிருந்து கிளம்பி எஸ்.கே.ஆர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் என் தம்பிய பழிவாங்கணும்னு நினைச்சு அடிச்சது நீதானே என எஸ்கேஆர் இடம் கேட்கிறார்.

பிரபுவின் மகள் முதல் கணவரை பிரிய காரணம் இதுதானா.! அடப்பாவிங்களா சொந்தக்காரங்களே இப்படி இருக்கீங்களா..

இதற்கு எஸ்.கே.ஆர் என் தம்பிய கார் ஆக்சிடென்ட் பண்ணது நீதானு ஒத்துக்குரியா என்று கேட்க அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன். மறுபுறம் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டிற்கு வர என்னுடைய அண்ணன் தான் அருணோட ஆக்சிடென்ட் காரணம் என சொல்ல இந்த நேரத்தில் கரிகாலன் என்ன சொல்லிக்கிட்டு இருக்க நீ என்று கேட்கிறார் இதற்கு ஆதிரை பளார் என அறைகிறார். இந்த நேரத்தில் உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது என்று எஸ்.கே.ஆர் சொல்ல இதற்கு சாருபாலா இல்ல ராஜா ஆதிரை இங்க தான் இருக்கணும் என கூறுகிறார்.

Exit mobile version