ஜனனி ஃபேக்டரியில் நடக்கும் குழப்பம்.. அடித்துக் கொள்ளும் குடும்பத்தினர்கள்.! எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஜனனிக்கு தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது குணசேகரனுக்கு எதிராக எலக்ஷனில் ஈஸ்வரி போட்டி போட்டு வரும் நிலை இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு மத்தியில் ஈஸ்வரிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் குணசேகரன் தான் மக்கள் என்ன செய்தால் ஓட்டு போடுவார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் காய் நகர்த்தி வருகிறார். மேலும் பலருக்கும் ஓட்டுக்காக படம் கொடுத்து வருகிறார் ஆனால் ஈஸ்வரி ஓட்டுக்காக பணம் தரவில்லை.

தாலி கட்டுன முதல் கணவருடன் போக மறுக்கும் அமீர்த்தா.. இன்னும் ஒரு வாரம் கெடு வைத்துவிட்டு கிளம்பிய கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் குணசேகரனை பார்ப்பதற்காக ஜனனியின் எதிரி வர குணசேகரன், கதிர் என அனைவருக்கும் பொக்கே தருகிறார். ஆனால் ஜனனி தான் என்னுடைய எதிரி என சொல்ல அதற்கு குணசேகரன் உங்களுக்கு இவ எதிரியா என கிண்டல் அடிக்கிறார். பிறகு ஜனனி சக்தி இருவரும் அட்விகேட்டை பார்க்க அவர் பூஜையை போட்டு ஃபேக்டரியை திறக்குமாறு சொல்கிறார்.

எனவே இதற்கான வேலைகள் செய்து வரும் நிலையில் திடீரென ஃபேக்டரியில் வேறு ஒருவர் பூஜை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஜனனி அதிர்ச்சடைகிறார். மறுபுறம் ஜன்னியை பார்ப்பதற்காக இவருடைய அம்மா, அப்பா இருவரும் வருகின்றனர். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஜனனியின் அம்மா அப்பாவை பார்த்து கொந்தளிக்கும் எதிரியின் அம்மா அசிங்கப்பட்டு எந்த மரியாதையும் இல்லாமல் போனதற்கு இந்த நாச்சியப்பன் தான் காரணம் என சொல்ல அதற்கு பக்கத்தில் இருக்கும் பாட்டி அவன் ஏற்படுத்துன கரைய அவனே அழிச்சிட்டானா ஏத்துப்பீங்களா என கேட்கிறார்.

அந்த மாதிரி மாத்திரை.. மயங்கி விழுந்த தொகுப்பாளனி.. கடவுள் போல் வந்து நடிகரின் மானத்தைக் காப்பாற்றிய நடிகை..

இந்த நேரத்தில் கடுப்பான ஜனனியின் அம்மா எதுக்குமே உங்க கைய எதிர்பாக்காத மனுஷன் இப்போ வந்து சொத்து தரேன்னு சொன்னீங்கன்னா உங்க பின்னால வந்துடுவாரா என கேட்கிறார். இவ்வாறு இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதை பார்த்து கண் கலங்குகிறார் ஜனனியின் அப்பா.

Exit mobile version