மருமகளிடம் கெஞ்சும் குணசேகரன்.! லந்து விடும் ரேணுகா.! ஜனனி பதிலைக் கேட்டு அதிர்ச்சடைந்த குடும்பம்.!

Ethirneechal : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆண்களின் ஆதிக்கம் பெண்களுக்கு எதிராக எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பெண்களை மட்டம் தட்டுவது போல் ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. ஆனால் தற்பொழுது பெண்கள் தேவையை சொத்துக்காக தேட ஆரம்பித்துள்ளார் குணசேகரன்.

ஏற்கனவே குணசேகரன் தனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால் யார் காலை வேணாலும் பிடிப்பார் அந்த அளவுக்கு மகா மட்டமாக இறங்கி விடுவார் இந்த நிலையில் பட்டம்மாள் சொத்து 40 சதவீதம் இப்பொழுது ஜீவானந்தம் பெயருக்கு மாறியுள்ளது அதனை குணசேகரன் தன்னுடைய தம்பிமார்களோடு சென்று சண்டை போட்டு வாங்கி விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது.

அது மட்டும் இல்லாமல் ஜீவானந்தத்தின் செயலால் குணசேகரனுக்கு பிரச்சனை தான் வந்து கொண்டிருக்கிறது ஜீவானந்தத்தின் பிரச்சினையிலிருந்து வெளியே வர தற்பொழுது வீட்டு மருமகள்களின் உதவியை நாடி வருகிறார் குணசேகரன். தனக்கு சொத்து வேண்டும் என்பதற்காக இத்தனை நாள் மருமகளை அவமானப்படுத்தி கொண்டிருந்த குணசேகரன் முதன்முறையாக இன்றைய ப்ரோமோவில் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்.

வெளியான ப்ரோமோவில் ஆரம்பத்தில் தன்னுடைய அம்மாவிடம் சொத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டியது உன் மருமகள் உடைய கடமை என்று குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம் கூற அதற்கு ரேணுகா ஆம்பளைங்க இத்தனை பேர் இருக்கீங்களே மல்லுக்கட்டி சோத்த மீட்டு கிட்டு வாங்க என கூற உடனே ஞானம் ரேணுகாவை அடிக்க கை ஓங்குகிறார் இதனால் ஜனனி அதிர்ச்சியாகி நிறுத்துங்க என கத்துகிறார்.

அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு சொத்தை நாங்கள் வாங்கி தருகிறோம் என திடீரென வார்த்தையை விட்டு விடுகிறார் இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.
இதனை தொடர்ந்து குணசேகரன், ஞானம், கதிர் கரிகாலன் என அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அப்போது குணசேகரன் ஞானத்திடம் அத ஆடிட்டர் சொன்னாரு இல்ல டாக்குமெண்ட் எல்லாம் பொம்பளைங்க பேர்ல எழுதி இருக்கோம்ல என்று சொல்லி சில ரகசியத்தை பேசுகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment