சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் துணிந்து அடித்ததா இதோ முழு விமர்சனம்.!

நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, திவ்யா துரைசாமி,  புகழ் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் சூர்யா வக்கீலாக  நடித்து மிரட்டியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் தென்னாட்டு பகுதியில் சூர்யா வசித்து வருகிறார் அதேபோல் வில்லன் வடநாடு பகுதியில்  செல்வாக்கு மிகுந்த மனிதராக இருக்கிறார். அதேபோல் வடநாட்டு பகுதியில் இவரை எதிர்க்க ஆளே இல்லை அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார்.

தென்நாட்டு பகுதியில் சூர்யா பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன்.  நண்பன் போல் அப்பா சத்யராஜ் ஆகியவர்களுடன் தனது வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார். தென் நாட்டுக்கும் வட நாட்டுக்கு காலங்காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதேபோல் சூர்யா வசித்துவரும் தென்னாட்டில் அடிக்கடி இளம்பெண்கள் மாயமான முறையில் இறந்து விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் கொலை செய்யப்படுகிறார்கள்.

இது எதனால் நடக்கிறது இதற்கு காரணம் என்ன என்பதை சூர்யா தீவிரமாக கண்டுபிடிக்க இறங்குகிறார். ஒரு காலகட்டத்தில் இதற்கெல்லாம் காரணம் நடிகர் வினை என்பது தெரிய வருகிறது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி வினை தனது காரியத்தை சாதித்து வருகிறார்  சூர்யாவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும் தன்னிடம் உள்ள பெண்களின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார்.

இதனை எப்படி சூர்யா தடுக்கிறார் வில்லனுக்கு எப்படி தண்டனை வாங்கித் தருகிறார் என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த திரைப்படத்தில் சூர்யா கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஆக்ஷன், காமெடி ரொமான்ஸ், டான்ஸ் என பக்கா கமர்சியல் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் உருவாக்கியுள்ளது.

அதேபோல் படம் முழுவதும் ஹீரோவாக சூர்யா ஜொலிக்கிறார் அதுமட்டுமில்லாமல் சண்டைக்காட்சிகளில் மிகவும் ஆக்ரோஷமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள ப்ரியங்கா மோகன் ஆரம்ப காலகட்டத்தில் வெகுளியாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தைரியமான பெண்ணாக மாறி தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை  வியப்பில் ஆழ்த்துகிறார்.

இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்தில் அப்பட்டமாக தெரிகிறது திவ்யா துரைசாமி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதேபோல் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்களும் மூத்த நடிகர்கள் என்பதால் அவர்கள் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

மேலும் சூரி, தேவதர்ஷினி, புகழ் ஆகியோர்கள் சில காட்சிகளே வந்தாலும் காமெடிக்கு கியாரண்டி கொடுத்துவிட்டார்கள். குடும்பப் படங்களை இயக்குவதில் இவரை அடித்துக் ஆளே இல்லை என்ற அளவிற்கு தனது இயக்கும் திறமையை நிரூபித்துள்ளார் பாண்டிராஜ். அதேபோல் இந்த படத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றி சில மெசேஜையும் கூறியுள்ளது படத்திற்கு சிறப்பு.

பல நடிகர் நடிகைகள் இருந்தாலும் படத்தின் வசனங்களை மிக அழகாக அமைந்துள்ளது படத்திற்கு பக்கபலம் அதேபோல் பாடலை குறைத்திருக்கலாம். டி இமான் இசை நன்றாக இருந்தாலும் பாடல் எதுவும் மனதில் பதியவில்லை அது படத்திற்கு மைனஸ் தான். ரத்னவேலு ஒளிப்பதிவு காட்சியில் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் நிற்கவைக்கிறார் அதிலும் சண்டை காட்சிகள் மட்டும் வேற லெவல் என கூறலாம். மொத்தத்தில் எதற்கும் துணிந்தவன்  நம்பி செல்லலாம்.

Leave a Comment

Exit mobile version