வெட்கமே இல்லாமல் சட்டையை கழற்றி மாற்றுவது போல மாப்பிள்ளை மாற்றி திருமணம் செய்துக்கொண்டிங்க.! அக்கா, தங்கையை வம்புக்கு இழுத்த அத்தை.!

முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இரண்டாவது சீசனில் ஒளிபரப்பாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2.  சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

காதல் ரொமான்டிக் நிறைந்த காட்சிகளாக இருந்து வந்த நிலையில் தற்போது காதலித்த ஜோடியை நிச்சயமான மற்றொரு ஜோடி உடன் மாற்றி மாற்றி திருமணம் செய்து வைத்து அவர்கள் எந்த அளவிற்கு தவித்து வருகிறார்கள் என்பதை இந்த சீரியல் மிகவும் அழகாக உணர்த்துகிறது.

இந்த சீரியலில் இளம் நடிகர் நடிகைகள் இருப்பதால் இளம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் தான் கேப்ரில்லா. இவர் தனது சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு துடித்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் கெத்தாக நடித்து வருகிறார்.

இவ்வாறு ஜோடிகள் மாறி திருமணமான நிலையில் பார்த்தசாரதியின் அத்தை பார்த்தசாரதிக்கு தனது மகளை திருமணம் செய்து கொள்ள வைக்க ஆசைப்படுகிறாள் ஆனால் பார்த்தசாரதிக்கு பிடிக்காத காரணத்தினால் இந்தத் திருமணம் நடக்கவில்லை அதன் பிறகுதான் பிரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் பார்த்தசாரதி.

பிறகு திருமணத்தின் பொழுது பிரியாவை கடத்தி விடுகிறார்கள் எனவே பாதிக்கு கேப்ரில்லாவை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் பிறகு ஜீவாவை  பிரியாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் பார்த்தசாரதியின் அத்தையிடம் பிரியா சிக்கிக்கொண்டார் கண்டபடி வாயில் வந்ததையெல்லாம் கூறி திட்டுகிறார்.

அதில் சட்டையை கழற்றி மாற்றுவது போல அக்கா தங்கைகள் வெட்கமில்லாமல் மாப்பிள்ளையை மாற்றி திருமணம் செய்து கொண்டீர்கள் என கேலி கிண்டல் செய்து பேசியதோடு மட்டுமல்லாமல் டீ குடித்த டம்ளாரை பிரியாவை கழுவ சொல்கிறாள் இதனைப் பார்த்த கேப்ரில்லாவிற்கு சுல்லென்று ஏறுகிறது.

உடனே நாங்கள் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து இருக்கிறோம் உங்களுக்கு வேலைக்காரிகள் கிடையாது என மிகவும் கோபமான திட்டி பிரியாவை திட்டி அவர்களை கிழித்து தொங்க விடுகிறாள். இப்பொழுதுதான் இந்த சீரியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Leave a Comment

Exit mobile version