ப்ரியாவின் பிறந்தநாளுக்கு ஜீவா கொடுத்த பரிசு.! நெகிழ்ச்சியில் ப்ரியா..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் அமோக வெற்றியை பெற்ற நிலையில் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி ஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

அது ஈரமான ரோஜாவே சீரியல் தான். முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2-வது சீசன் அறிமுகமாகி சில வாரங்களிலேயே டிஆர்பி-யில் இடம் பிடித்துள்ளது. அதோடு இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது பார்த்திபன் மற்றும் ப்ரியா இருவருக்கும் திருமணமாக இருந்த நிலையில் பிரியாவை திருமண நேரத்தில் கடத்திச் சென்றதால் பார்த்திபனுக்கு காவியாவை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். பிறகு பிரியாவிற்கு ஜீவாவை திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

இந்நிலையில் ஜீவா மற்றும் காவியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இவ்வாறு பிரிந்ததால் தற்பொழுது இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருவருமே தவித்து வருகிறார்கள்.  ஜீவா பிரியாவை புரிந்து கொள்ள நிலையில் காவியா பார்த்திபனை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

பார்த்திபன் சேர்ந்து வாழ ஆசைப் பட்டாலும் காவியா இவ்வாறு கூறியது பெரும் வேதனையில் உள்ளானார். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளிவந்து எபிசோடில் பிரியாவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது அதில் அவருக்கு பரிசாக டைமண்ட் ரிங்கை ஜீவா வாங்கி கொடுக்கிறார்.

இருவரும் ரூம்மி சென்றதும் டைமண்ட் ரிங் நான் வாங்கவில்லை அப்பா, அம்மா தான் வாங்கி தந்தாங்க உங்களுக்காக நான் கேசரி செய்து இருக்கிறேன், இதுதான் என்னுடைய பரிசு என்று கூறுகிறான். பிரியாவும் உங்களைப்போல் உண்மையான கணவர் எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்று கூறி அதனை அழகாக சாப்பிடுகிறாள் அதனை பார்த்து ஜீவாவும் ரசிக்கிறார்.  இவ்வாறு விரைவில் ஜீவா தனது மனதை மாற்றிக் கொண்டு பிரியாவிடம் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment