காவியா பரிகாரம் செய்யாததால் பார்த்திபனின் அம்மா எடுத்து அதிரடி முடிவு.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று தான் ஈரமான ரோஜாவே 2. பிரியா ஜீவாவை ஏற்றுக் கொண்டதால்   எப்படியாவது ஜீவாவின் மனதை மாற்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். ஜீவாவும் ஓரளவிற்கு இது தனது மனதை மாற்றி வருகிறார்.

மேலும் பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொண்டாலும் காவியா பார்த்திபனை டிவோர்ஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரியா, ஜீவா இருவரும் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுடன் டூர் சென்று வந்தார்கள்.

இவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் காவியாவை எக்ஸாம் எழுதுவதற்காக பெங்களூர் அழைத்து சென்றார்.  இருவரும் பெங்களூரில் மால் போன்றவற்றில் சுற்றிவிட்டு சமீபத்தில் தான் வீடு திரும்பினார்கள்.  மேலும் போன இடத்தில் பார்த்திபனுக்கு காவியா வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார்.

இதனால் பார்த்திபன் மகிழ்ச்சியடைந்து தனது வீட்டில் இருப்பவர்களிடம் கூறினான். மேலும் பார்த்திபனும் காவியாவுக்கு டெடிபியர் ஒன்றை பரிசாக அறிவித்தார்.இந்நிலையில் வீட்டிற்கு வந்தவுடன் பார்த்திபன் மற்றும் காவியா இருவரின் ஜாதகத்தையும் பார்க்கும் பொழுது ஜோசியர் இந்த இரண்டு ஜாதகமும் சுத்தமாக  ஒத்துப் போகவில்லை  இவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்.

உடனே பார்த்திபன் அம்மா ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்று கூற அவர் பரிகாரம் சொல்கிறார். வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து விடு என்று காவியாவிடம் கூற காவியா சாரி அத்தை என்னால் முடியாது என்று கூற நானே இந்த பரிகாரத்தை செய்கிறேன் என்று பார்த்திபனின் அம்மா கூறுகிறார்.

Leave a Comment