8 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக என்ட்ரீ குக் வித் கோமாளி பிரபலம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிடி ஷோதான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய மனக்கவலைகள் தீர்வதாக கூறி வருகின்றனர். மேலும் மனக்கவலை இருந்ததால் தற்கொலை செய்ய முயன்றதாகவும் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியினால் தனது மனக்கவலை நீங்கி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறிவரும் நிலையில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது குக் வித்  கோமாளி பிரபலம் ஒருவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் நடித்திருக்கும் நிலையில் அந்த படம் குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வெளியாக ரசிகர்கள் அந்த நடிகைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதாவது தனுஷின் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின்.

அதன் பிறகு ஸ்டுடென்ட், நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் மேலும் கடைசியாக இவர் சந்தானம் உதயநிதி கூட்டணியில் வெளிவந்த நண்பேண்டா படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குப் பெற்று வந்தார். இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவர் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரையில் நடித்துள்ளார்.

rajini
rajini

இவர் ‘ரஜினி’ என்ற படத்தில் நடித்த முடித்து இருக்கும் நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தினை சாக்லேட், மாஞ்சா வேலு, மலை மலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்த இவரை தொடர்ந்து வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், ரங்கநாதன், மூக்குத்திய முருகன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற வருவதாகவும் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment