குக் வித் கோமாளி அஸ்வின் படத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் ரசிகர்கள்.? தொலைக்காட்சியில் மோசமான வரவேற்ப்பு..

நடிகர் அஸ்வின் குமார் சின்னத்திரை சீரியல் நடிகராக அறிமுகமாகி பின்பு ஒரு சில குறும் படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் அடைந்தவர். ஒரு கட்டத்தில் அஸ்வினுக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி பணியாற்றிய அஸ்வினுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் பல இளம் ரசிகர் ரசிகைகள் உருவாகினர். பின்பு இவருக்கு சினிமாவிலும் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அப்படி அஸ்வின் முதல் படமாக என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார்.

மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழும் காமெடி நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் அஸ்வின் நான் கிட்டத்தட்ட 40 கதைகள் கேட்டேன் ஆனால் அந்த 40 கதைகளிலும் நான் தூங்கிவிட்டேன்.

பின்பு என்ன சொல்ல போகிறாய் படத்தின் கதைதான் எனக்கு பிடித்தது என கூறியிருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் அஸ்வினை பலரும் திட்டி தீர்த்து வந்தனர். பின்பு சில தடைகளைத் தாண்டி ஒருவழியாக என்ன சொல்லப் போகிறாய் படம் திரையரங்கில் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது.

கடந்த வாரம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தை ஒளிபரப்ப செய்தது. தொலைகாட்சியில் ஒளிபரப்பான இப்படம் 0.99 மோசமான டிஆர்பியை பெற்றுள்ளது. இதன் மூலம் அஸ்வின் 40 கதைகளில் நான் தூங்கிவிட்டேன் என்று கூறியதை பலரும் இன்றும் மறக்கவில்லை என்பது தெரியவருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment