BREAKING NEWS: என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு குரல் கொடுத்தவர் திடீர் மறைவு..! ஷாக்கான ரசிகர்கள்..!

சில மாதங்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியாகி மாபெரும்  வெற்றி கண்ட ஒரு பாடல்தான் என்ஜாய் என்ஜாமி இந்த பாடல் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வகையில் இந்தப் பாடலானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடலாகவும் அமைந்துவிட்டது.

இவ்வாறு உருவான இந்த பாடலை பாடகர் அறிவு பாடியது மட்டுமல்லாமல் இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் மகள் தீ இசையமைத்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்தப் பாடலானது சுமார் 275 மில்லியன் பார்வையாளர்களை  கவர்ந்து விட்டன.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலானது தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் ரஜினி போன்றோர்களின் திரைப்படத்தில் இருக்கும் பாடல்களை காட்டிலும் அதிக அளவு பார்வையாளரை பெற்றது இதுவே முதல் முறை.

ஏனெனில் இந்த பாடலில் ஒரு வயதான பாட்டியின் குரல் இடம்பெற்றிருக்கும் அவருடைய பெயர் பாக்கியம் அம்மாள் இவர் சமீபத்தில் இயற்கை எழுதியதாக இந்த பாடலை பாடிய அறிவு என்பவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். மேலும் இந்தப் பாடலை பாடிய அந்த பாட்டிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் இரங்கல்  தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் இந்தப்பாடல் வெற்றிக்கு காரணம் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை தயாரித்தவர் சந்தோஷ் நாராயணன் தான் இதே போல நமது பாடகி தீ ரவுடிபேபி பாடலையும் பாடி பலமில்லியன் பார்வையாளர்களை சந்தித்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

enjoy-enjomi

Leave a Comment

Exit mobile version