இந்த கோப்பைக்கு தகுதியான அணி இங்கிலாந்து தான் – சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து சொன்ன விராட் கோலி..

இந்திய கிரிக்கெட் அணி அண்மை காலமாக மிகப்பெரிய போட்டிகளில் கோப்பையை கைப்பற்ற வில்லை அந்த வகையில் அண்மையில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாண்டாலும் செமி பைனலில் இங்கிலாந்துடன் தோற்று வெளியேறியது..

இந்திய அணியை வென்ற பிறகு பைனலில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இங்கிலாந்து அணி. ஆரம்பத்திலேயே  இங்கிலாந்து சிறந்த பந்துவீச்சை வீசி பாபர் ஆசாம், ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்களை உடனே ஆட்டம் இழக்க வைத்தது பிறகு பாகிஸ்தான் அணியை தன் கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்தது

அடுத்து அடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கொடுத்திருந்தாலும் இங்கிலாந்து அணி 20 ஓவர் உள்ளையே அனைத்து ரன்களை அடித்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி பைனலில் வென்று கோப்பையை தன்வசப்படுத்தியது. இங்கிலாந்து அணி கோப்பை வென்ற பிறகு பலரும் அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்பாக கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இங்கிலாந்த் அணியை  புகழ்ந்து பேசினார் மேலும் பட்லரின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது என கூறினார். அந்த வகையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு தரமான சம்பவம் செய்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்

அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் இங்கிலாந்து அணி கோப்பையை வென்று அசத்திய புகைப்படத்தை வெளியிட்டு அதில் சில பதிவுகளையும் போட்டுள்ளார். இந்த 20 ஓவர் கோப்பையை  வெல்வதற்கான ஒரு தகுதியான அணி இங்கிலாந்த அணி எனக்கூறி  பதிவிட்டிருந்தார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் விராட் கோலி போட்ட அந்த பதிவு மற்றும் அந்த புகைப்படத்தை ..

england
england
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment