திடீரென முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.! வருத்தத்தில் ரசிகர்கள்..

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கி வரும் சன் டிவி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீரியலுக்கென்றே பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி இருந்து வரும் நிலையில் அப்படி சன் டிவி சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. அப்படி தற்பொழுது பிரபல சீரியல் ஒன்று நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

தற்பொழுது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 தொடர்ந்து இருந்து வரும் கயல், எதிர்நீச்சல், இனியா போன்ற தொடர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது வருகிறது. இவ்வாறு இந்த சீரியல்களுக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் சீரியல் தான் அன்பே வா.

இதனை தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கிறதாம். இவ்வாறு இந்த தொடரை நிறுத்துவதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது பொம்மி, வருண் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

வருணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று வரும் நிலையில் இந்த திருமணத்தின் மூலம் அனைவருக்கும் வருண், பொம்மி இருவரும் கணவன் மனைவி என தெரியவரா இருக்கிறது. மேலும் பப்பு வருணை தனது அப்பாவாக ஏற்றுக் கொள்வாரா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அனைத்து உண்மையையும் அனைவருக்கும் தெரிய வர இந்த சீரியல் முடிவடைய இருக்கிறது.

Leave a Comment