“விசித்திரன்” படத்தில் முதலில் இந்த இரண்டு பேரில் யாரோ ஒருவர் தான் ஹீரோவாக நடிக்க இருந்தது.! படத்தில் ஹீரோவாக நடித்த ஆர் கே சுரேஷ் ஓபன் டாக்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்த ஒரு திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்து அதில் சில சீன்களை  திணித்து அந்த மொழியில் ஹீட் கொடுப்பது பலருக்கும் கை வந்த கலை அந்த வகையில் மலையாளத்தில் வெளியான ஜோசப் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து விசித்திரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இந்த திரைப்படத்தை தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ஜோசப் படத்தை இயக்கி வெற்றி கண்ட பத்மகுமார் தான் தமிழில் விசித்திரன் என ரீமேக் செய்து  படத்தையும் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்த படம் வித்தியாசமான திரைப்படம் என்பதால் இதற்கு ஏற்ற மாதிரியான ஒரு சிறந்த நடிகரை போட வேண்டும் என படக்குழு அப்பொழுது தீர்மானித்தது முதலில் இந்த திரைப்படத்திற்கு வேறு ஒரு நடிகரை தான் தேர்வு செய்தனர் ஆனால் அதில் அவர் நடிக்காததால் அதன் பிறகு ஆர்கே சுரேஷ் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பிரபலமடைந்த நடிகை பூர்ணா இத்திரைப்படத்தில் நடிக்கிறார் மற்றொரு நடிகையாக மதுஷாலினி நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக ஜிவி பிரகாஷ் இசையமைப்பது பக்கபலமாக இருக்கிறது.

இந்த நிலையில் இப்படம் குறித்து விசித்திரன் பட நடிகரும், தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது இந்த படத்தில் முதன் முதலில் விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் முதலில் பரிசீலிக்கப்பட்டன ஆனால் இயக்குனர் பாலா தன்னை பரிந்துரைத்துள்ளார் அவரால் தான் இந்த படம் கிடைத்தது மேலும் இந்த திரைப்படம் வெளியீடு திரையரங்காஅல்லது OTT தளமா என்பதை தயாரிப்பாளர் பாலா தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

Leave a Comment