சச்சினை தூக்கி சுத்தி வந்த மாதிரி.. உலக கோப்பையில் இந்த வீரரையும் தூக்கி சுத்தணும் – சேவாக் விருப்பம்

Sehwag : இந்திய அணி ஆசிய கோப்பை தொடரை வென்றதை தொடர்ந்து உலக கோப்பை தொடரை வெல்ல ஆயுதமாகி வருகிறது வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது.  இந்தியாவுக்கு வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் பல பரீட்சை நடத்துகிறது.

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட இருக்கிறார் மற்றபடி அனுபவம் வாய்ந்த விராட் கோலி, கில், கே எல் ராகன் சூர்யா குமார் யாதவ், சமி, பும்ரா என 15 பேர் இந்திய அணியில் இருக்கின்றனர்.  செய்யும் இந்த தடவை இந்தியா உலக கோப்பையை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்.. சச்சின் மற்றும் வீரர் கோலி குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார்.

கடைசியாக அவர் விளையாடிய உலக கோப்பையில் கோப்பையை வென்று கொடுத்தார் அதனால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதேபோல இந்த தடவை ஒரு வீரரை நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் அந்த வீரர் வேறு யாரும் அல்ல விராட் கோலி தான் கூறினார்.

virat kohli
virat kohli

2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை ஆனால் இந்த முறை அவர் சதம் அடிப்பார் நிறைய ரன்கள் அடிப்பார். இந்த உலக கோப்பையில் வீரர்கள் அவரை தோள் மீது சுமந்து கொண்டு சுற்றிவர வேண்டும் என தான் விரும்புதாக கூறி இருக்கிறார்.