துணிந்து இறங்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம்..! இணையத்தில் லீக்கான ரிலீஸ் அப்டேட்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதாபாத்திரம் கொண்ட திரைப்படமான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடிப்பது மட்டுமில்லாமல் அவருக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்த கதாநாயகி பிரியங்கா மோகன் அவர்கள் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ்,ராமர், சத்யராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பதன் காரணமாக இத்திரைப்படத்தை எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது.

மேலும் இத்திரைப்படம் வருகின்ற வருடம் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தது மட்டுமில்லாமல் மற்றொரு அதிர்ச்சியான தகவல்களையும் படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது இந்த திரைப்படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி மாதம் நான்காம் தேதி  வெளியிடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் மேலும் இத்திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

surya

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கான கதாநாயகி தேர்வு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் அவர் முடியாது என்று கூறியதாக தெரிய வந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version