KGF chapter-2 படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் மிரட்டலாக இருக்குமாம்.! டப்பிங் யார் பேசியுள்ளது தெரியுமா.! செம்ம தகவல் இதோ

KGF திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யாஷ், பிரசாந்த் நீல் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்து கேஜிஎப் 2 என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட வந்தாலும் இடையில் கொரோனா பிரச்சினை காரணமாக முன்னும் பின்னும் ஆனது.

ஒருவழியாக படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தின் தமிழ் உரிமத்தை  ட்ரீம் வாரியர் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த திரைப்படம் சுமார் 120 கோடி செலவில் எடுக்கப்பட்டு உள்ளது இதை தாண்டி  பல கோடி லாபம் சம்பாதிக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இத்திரைப்படம் கன்னடத்தையும் தாண்டி தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் இணைந்து சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ் ஸ்ரீநிதி ரெட்டி, ரவீணா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில்  ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் “யாஷ்” அந்த கதாபாத்திரத்திற்கு தற்போது டப்பிங் கொடுத்துள்ளார் இதனால் படத்தில் வசனங்கள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும் என தெரியவருகிறது.

இதனால் ரசிகர்கள் பலரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment