இந்த நடிகரிடம் 25 கோடி கடன் வாங்கினாரா சமந்தா.? பணம் நெருக்கடி காரணமாக திடீர் முடிவு..

Actress Samantha: நடிகை சமந்தா தன்னுடைய மருத்துவ செலவுக்காக பிரபல நடிகரிடம் 25 கோடி கடனாக பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாகப் பரவி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்ததற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.

அப்படி புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் திடீரென மையோசிடிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார் இதனால் எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் சுமார் ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த சமந்தா அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்றார். பிறகு ஓரளவிற்கு உடல் நலம் சரியான காரணத்தினால் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துக் கொண்டார்.

முழுமையாக குணமடையாமல் இருந்து வந்த நிலையில் தற்காலிகமாக திரைப்படங்களில் இருந்து விலகி இருக்கிறார். மயோசிடிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி, வருண் தாவனுடன் சித்தாடல் போன்ற வெப் தொடர்களில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இதனை அடுத்து இவர் கமிட்டாகி இருந்த படங்களில் இருந்து விலகி உள்ளார். எனவே இதன் காரணமாக தயாரிப்பாளர்களிடமிருந்து தான் பெற்ற முன் பணங்களையும் கொடுத்துள்ள நிலையில் பாலி நாட்டுக்கு சென்று வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார். மேலும் இதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மீக தளங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் சமந்தா தற்பொழுது பணம் நெருக்கடியினால் கஷ்டப்பட்டு வருவதாகவும் எனவே தனது சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகரிடம் இருந்து 25 கோடி ரூபாய் கடனாக பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் யார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை மேலும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment