நடுக்கடலில் திருமணம் செய்துகொண்ட திரௌபதி பட நடிகை.! ஆச்சிரியத்தில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்.

பல நடிகைகள் சின்னத்திரையின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அழகிய தமிழ் மகள் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஷீலா.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் திரௌபதி திரைப்படத்தில் நடித்து சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார். இத்திரைப்படம் பெண்களுக்கு மற்றும் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதால் பெருமளவில் பாராட்டப்பட்டது.

இத்திரைப்படத்தை இயக்குனர் ஜி மோகன் இயக்கத்தில்  ஷீலா கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் ரிச்சர்ட் நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து டூ லெட், மண்டேலா உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷீலா தொடர்ந்து கதாநாயகியாகவும்,துணை கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவ்வாறு இவர் நடிப்பில் வெளிவந்த  அனைத்து படங்களிலுமே குடும்ப பாங்காக நடித்து இருந்தார்.

ஆனால் சமீபத்தில் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஷீலா 2014 ஆம் ஆண்டு நாளைய இயக்குனர்களில் பங்கேற்ற சோழர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்தவகையில் மாலைகளுடன் இருவரும் கடலில் போட்டிங் செய்யும் பொழுது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

sheela
sheela

Leave a Comment