அந்த இரண்டு ஹீரோவுடன் நடிக்க எனக்கு கொடுத்து வைக்கல.. ஏக்கத்துடன் கூறிய மீனா.! ஆறுதல் சொன்ன ரசிகர்கள்

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தான் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை மீனா.  முதலில் இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு அதே ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரஜினி, விஜயகாந்த், கமல், சத்யராஜ் சரத்குமார், பிரபு, அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டார் இப்படி திரையுலைகள் ஓடிக்கொண்டிருந்த இவர் பிரபல தொழிலதிபர் வித்தியாசாகரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் பிறந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் தற்பொழுது நடித்து வருகிறார்.

முதலில் விஜயின் தெறி திரைப்படம் அதனைத் தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து  நடிகை மீனாவும் தனது கணவர் வித்யாசாகர் இறப்பிற்கு பிறகு தற்போது  சினிமா உலகில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளார்.   அதனை முன்னிட்டு அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகை  மீனா பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்கள் விஜய் மற்றும் அரவிந்த்சாமி இவர்கள் இரண்டு பேருடன் இதுவரை நான் ஜோடி போட்டு நடிக்கவே இல்லை ஆனால் ஷாஜகான் படத்தில் விஜய் உடன் ஒரு பாடல் காட்சியில் நடித்து விட்டேன்..

ஆனால் அரவிந்த் சாமியுடன் ஒரு சீன் கூட இதுவரை நடிக்கவில்லை ஆனால் என் மகள் நைனிகா தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் இருவருடன் நடித்து விட்டாள் எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் மகளுக்கு கிடைத்து விட்டது ஏக்கமாக கூறினார் மீனா. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment