என்கிட்ட அதைப் பற்றி கேட்காதீங்க.. அஜித் சார் கோபப்படுறாரு.. சிக்கிதவிக்கும் பிரபல இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றி கண்டுள்ளவர் வெங்கட் பிரபு இவர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அஜித் விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் பின் ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இவர் இயக்குனராக சென்னை 600028, கோவா போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் வெற்றி படங்கள் என்பதால் டாப் நடிகர்கள் கூட இவரிடம் கதை கேட்க ஆரம்பித்தனர். அந்த வகையில் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா படம் எடுத்தார் இது அஜித்திற்கு 50-வது படம், முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி என அனைத்தும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியது படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

மங்காத்தா படம் அஜித்திற்கும் சரி அஜித் ரசிகர்களுக்கும் சரி இப்பொழுதும் பேவரட் திரைப்படம் ஆக இருந்து வருகிறது. இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென பலரும் கேட்டுக் கொண்டு வருகின்றனர் வெங்கட் பிரபுவும் நிச்சயமாக மங்காத்தா 2 படம் உருவாகும் நானும் அஜித்தும் பேசி வருவதாக பல தடவை கூறினார் மேலும் முக்கிய நாட்களில் வெங்கட் பிரபு அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு கதை எல்லாம் ரெடியாக இருக்கிறது அஜித் ஓகே சொன்னால் மங்காத்தா 2 குறித்து ஏதாவது ஒரு அப்டேட்டை சொல்லுவார்.

இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் அஜித்துக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது அஜித் அடுத்த அடுத்த பட இயக்குனர் யார் என்பதை வெளியே சொல்ல கூடாது என நினைப்பார் ஆனால் வெங்கட் பிரபு நிச்சயமாக அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுக்க போகிறேன் அவர் ஓகே சொன்னால் எப்ப வேண்டுமானாலும் எடுக்க ரெடி என சொல்லிக்கொண்டே வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 படம் குறித்து கேட்டுள்ளனர் அதற்கு அவர் சொன்னது நீங்கள் மங்காத்தா 2 அப்டேட் கேட்கிறீர்கள் இதை அஜித் அறிந்து கொண்டு ஒரு தடவை என்னை அழைத்து மங்காத்தா 2 படம் பற்றி கேட்டால் நீ என்னை மாட்டி விடுகிறாயா என்று கோபப்பட்டாராம். இதனைப் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Leave a Comment