பித்தம் தலைக்கேறி ஆணவத்தில் ஆடும் சிவகார்த்திகேயன்.! இது எங்கே போய் முடியுமோ அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தற்போது டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே  ப்ரொடக்ஷன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

இதற்கு முன்பு மெர்சல் ஸ்பைடர் மாநாடு ஆகிய திரைப்படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். அதிலும் மாநாடு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சிம்புவை விட எஸ் ஜே சூர்யாவை தான் அதிகம் பாராட்டினார்கள் மக்கள் அந்த அளவு வில்லன் கதாபாத்திரத்தில் தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அதேபோல் எஸ் ஜே சூர்யாவின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்று தெரிந்தாலே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் படத்தை பார்க்க முதலில். எஸ் ஜே சூர்யா வில்லனாக உயர்ந்துவிட்டார் ரசிகர்கள் மனதில். இந்த நிலையில் டான் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் சொந்த திரைப்படம் என்பதால் யாராலும் எதிர்த்து பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் எஸ் ஜே சூர்யா அவர்கள் பேசியதாவது விஜய்யை அடுத்ததாக குடும்பம் குடும்பமாக படங்களை பார்க்க திரைக்கு வருகிறார்கள் என்றால் அது  சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு தான் என சிவகார்த்திகேயனை பெருமையாகப் பேசினார் எஸ் ஜே சூர்யா ஆனால் அப்படிப் பேசிய எஸ் ஜே சூர்யாவின் புகைப்படத்தை கூட பெரிதாக போடக்கூடாது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளது ஆணவத்தின் உச்சம் என சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

பிரபல திரையரங்கில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பேனர் ஒன்றை வைத்திருந்தார்கள் அதில் சிவகார்த்திகேயனுக்கு சமமாக எஸ் ஜே சூர்யா வின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது இதனை தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தின் ஹீரோ யார் நான் தானே என்னுடைய புகைப்படம் தான் பெரிதாக இருக்க வேண்டும் எதற்காக எஸ் ஜே சூரியவின் புகைப்படத்தை பெரிதாக காட்டி உள்ளீர்கள் என காண்டாகி உள்ளார்.

மேலும் சமிபத்தில் டான் திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில் டான் திரைப்படத்தில் நடித்த பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வாழ்த்து கூறும் விதமாக சிவகார்த்திகேயன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்  இதை பார்த்த மனோபாலா என்னுடைய பெயர் மட்டும் இல்லையே என கேட்டுள்ளார் ஏனென்றால் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் நன்றி கூறி உள்ளார் ஆனால் மனோபாலாவை விட்டுவிட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் ஆணவத்தில் இருக்கிறார் என கூறி வருகிறார்கள் ஏனென்றால் சீனியர் நடிகைகளுக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என தெரியவில்லை எனவும் இதே நிலைமை நீடித்தால் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுவீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்கள்.

Leave a Comment