லியோ எல்சியு-வில் இணைகிறதா.? வெளியான புகைப்படத்தால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்…

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைகிறதா இல்லை இணையவில்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் ஹிட் ஆனா நிலையில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது அது மட்டுமல்லாமல் விக்ரம் படத்தின் தொடர்கதைதான் லியோ திரைப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது இதனால் எல்சியு-வில் இந்த திரைப்படம் இணைய இருக்கிறது உறுதி செய்யப்பட்ட தகவலாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனமும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. அதாவது விக்ரம் படத்தின் மேம்படுத்தப்படாத திரைக்கதை என்ற கேப்ஷேன் உடன் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் விக்ரம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜோஸ் என்ற கதாபாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. அதாவது விக்ரம் படத்தில் ஜோஸ் கதாபாத்திரத்திம் காஷ்மீருக்கு ஒரு கேஸ் விஷயமாக சென்றபோது அமர் எனக்கு அறிமுகமானார் என்று விக்ரம் திரைப்படத்தில் இந்த காட்சி இடம் பெற்று இருக்கும்.

இந்த நிலையில் லியோ திரைப்படமும் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது ஆகையால் விக்ரம் படத்தின் தொடர்கதையாக தான் இந்த கதை இருக்கும் என்றும் லியோ படம் எல்சியு-வில் கனெக்ட் ஆகும் என கூறி அந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் தளபதி ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Leave a Comment