குடிப்பழக்கத்தால் திருமணத்தை வேண்டாம் என கூறுகிறாரா நடிகை திரிஷா.? குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் திருமணம் செய்து கொள்வதற்கு தயங்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படியே அந்த நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய திருமண பந்தம் பாதிலேயே முடிந்து விடுகிறது. இதன் காரணத்தினால் பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் திரிஷா. இவருக்கு தற்பொழுது 40 வயதை நெருங்கி வரும் நிலையில் இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ள முனைப்பு காட்டாமல் இருந்தார். ஆனால் இவர் இரண்டு, மூன்று பேரை காதலித்து இதனால் தோல்வியை சந்தித்தார் எனவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார் நடிகை திரிஷா. மேலும் இவர் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து அடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி வரும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது திரிஷாவும் சமந்தாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருவதாகவும் இது நடிகை சமந்தாவுக்கு கடந்த ஆண்டு விவாகரத்து ஆனதால் தனக்கும் திருமணத்திற்கு பின்னர் இது போல் நடந்து விடுமோ என்ற பயத்தில் த்ரிஷா திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டி வருவதாகவும் கூறிய பயில்வான் ரங்கநாதன் மேலும் நடிகை திரிஷாவின் குடிப்பழக்கமும் அவரது திருமணம் தள்ளி போக முக்கியமான காரணம் என தெரிவித்துள்ளார்.

பிறகு நடிகை திரிஷா குடித்துவிட்டு போதையில் தள்ளாட்டியதாகவும் அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவர்கள் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் ஒருவேளை திருமணம் செய்து கொண்டால் இது போல் சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷா திருமணத்திற்கு நோ செல்வதற்கான மற்றொரு காரணம் எனவும் பதில் போன்ற ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Comment