பிக்பாஸ் குரலில் பேசியவரை மீடியா உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பாலாஜி முருகதாஸ்.!

சின்னத்திரையில் பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை தொடங்கியாதல் விஜய் டிவி டிஆர்பி யில் முன்னேறிக் கொண்டே செல்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி  சீரும் சிறப்புமாக செல்வதற்கு காரணம் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பிரபலங்கள் கலந்து கொள்வதால் ரசிகர்களின் தாண்டி மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் சீசன் ஒளிபரப்ப வருவதற்கு காரணம் மக்களின் ஆதரவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் இது தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது அந்த வகையில் சமீபத்தில் சீசன் 4 மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது.

பிக் பாஸ் வீட்டில்  பிக் பாஸ் குரலில் அசத்தும் சொந்தக்காரர் யார் என்று பலரும் கேட்டுக் கொண்டு வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

அந்த குரல் கம்பீரமாகவும் அதே சமயம் கவரும்படி இருப்பதால் பலரும் அதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்து வந்தனர் இந்த நிலையில் நான்காவது சீசனில் ரன்னர் கப் பாலாஜி முருகதாஸ் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஷயம் ஒன்றை செய்து காட்டியுள்ளார்.

அது என்னவென்றால் பிக் பாஸ்க்கு சொந்த  குரல் கொடுத்தவரை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் பாலாஜி.

உண்மையான பெயர் சச்சிதானந்தம் என்றும் அவர் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என தகவல் கிடைத்தது.

மேலும் அவர் சமூகவலைதளத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Leave a Comment