விஜய் நடிப்பில் சீமான் இயக்கத்தில் உருவாக இருந்த பகலவன் திரைப்படம் எதனால் கைவிடப்பட்டது தெரியுமா.? உண்மையை போட்டு உடைத்த முக்கிய பிரபலம்.

இளையதளபதி விஜயை வைத்து பல இயக்குனர்கள் படம் இயக்க முன் வந்தார்கள் ஆனால் அவர்களுக்கெல்லாம் விஜய் கதை நன்றாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு கொடுப்பார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று ஆகும் அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் சீமான் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம் வசூலில் மிக பெரிய வசூல் வேட்டை செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த திரைப்படம் தான் பகலவன் ஆனால் இந்த திரைப்படம் ஒரு சில காரணங்கள் குறித்து கைவிடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது சீமான் அருமையான கதை வைத்திருந்ததாகவும் அதனை விஜய் எதற்காக ஏற்காமல் போனார் எனவும் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தாணு இந்த படம் பற்றி கூறியுள்ளாராம் அதில் சீமானை சந்தித்தபோது அவர் எனக்கு பகலவன் கதையை சொன்னார் நான் உடனே விஜயிடம் அந்த கதையை கூற சொன்னேன் அதேபோல் சீமானும் விஜயை சந்தித்து கதை சொன்னார்.

விஜய்யிடம் கதை கூறியபொழுது விஜய் கதை மிகவும் அருமையாக இருக்கிறது என என்னிடம் சொன்னார் ஆனால் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் கொஞ்சம் சொதப்புவது போல் தெரிகிறது என கூறினார் நான் இதை அலட்சியப்படுத்தாமல் சீமானிடம் இதைப் பற்றி சொன்னபோது அவரும் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி விஜயிடம் இரண்டு,மூன்று முறை கதை கூறினாராம்.

vijay0
vijay0

இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி ஒத்துப் போகாததால் விஜய் இந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு ஈடுபாடும் செய்யாமல் அப்படியே விட்டதாகவும் தாணு கூறியுள்ளதாக இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விஜய் மட்டும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் படம் நன்றாக ஓடி இருக்கும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment