இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டி முடிந்த பிறகு மைதான ஊழியர்களுக்கு 35000 கொடுத்த ராகுல் டிராவிட் – எதற்காக தெரியுமா.?

இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருவதே ரசிகர்களை சலிப்படைய செய்தது காரணம் இதுவரை 20 ஓவர் பார்மட்டில் கேப்டனாக இருந்த கோலியை  தூக்கிவிட்டு ரோஹித்தை போட்டது மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தார் அவரது ஓய்வு காலம் முடிந்தது அடுத்து புதிதாக டிராவிட்டை போட்டது என தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

மேலும் இந்திய அணி எப்படி சிறப்பான ஆட்டத்தை உடனே வெளிப்படுத்தும் என பலரும் கேள்வி கேட்டு இருந்த நிலையில் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித்தின் கூட்டணி மிக சிறப்பாக இருந்ததால் இந்தியா நியூசிலாந்து டி20 ஒரு போட்டியை வென்று அசத்தியது அப்போது மக்கள் மற்றும் ராசிக்காரர்கள் இவர்களின் கூட்டணி நிச்சயம் இந்திய அணியில் ஒரு திருப்புமுனையை கொண்டுவரும் என சொன்னார்.

மேலும் இந்தியா – நியூசிலாந்து இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது போட்டி முடிந்த பிறகு ராகுல் டிராவிட் மைதானத்திற்கு உள்ளே சென்று பிட்சை பார்த்துவிட்டு உடனடியாக ஊழியர்களை சந்தித்து சுமார் 35 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது ஒரு பயிற்சியாளர் ஏன் இவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதே பல்வேறு பிரபலங்களின் கேள்வியாக இருந்தது உண்மையில் அவர் கொடுத்ததற்கு காரணம் ஒவ்வொரு நாள் ஆட்டம் முடிந்த பிறகும் அடுத்த நாள் பிட்ச் சிறப்பான முறையில் பரமாரித்து இருந்தாக கூறி மைதான ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ஐந்து நாட்கள் சுவாரஸ்யமாக இருப்பதற்கு இதுதான் காரணம் எனக்கூறி அந்த தொகையை அவர்களுக்கு கொடுத்துள்ளார் டிராவிட். இதை அறிந்த அந்த மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது இனி வருகின்ற ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் தரமான மைதானத்தை கொடுப்போம் என கூறி உள்ளது.

Leave a Comment