கல்யாணம் பண்ணுவதற்கு முன்பே வித்தியாசாகரை நிராகரித்த மீனா – கடைசியில் ஏன் ஏற்றுக்கொண்டார் தெரியுமா.?

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி பின் ரஜினியின் முத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். அதன்பின் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சரத்குமார், சத்யராஜ், முரளி, அஜித் போன்ற டாப் பிரபலங்களின் படங்களில் நடித்து தன்னை மென்மேலும் பிரபலப்படுத்திக் கொண்டார்.

இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவர் 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு சொல்லும்படி பெரிய படங்கள் கிடைக்கவில்லை ஆனால் மலையாளத்தில் ஒன்னு ரெண்டு படங்கள் கிடைத்தது அதில் தலை காட்டை நடித்துக் கொண்டிருந்தார். 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வித்தியாசாகரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார் அவரும் மீனாவைப் போல குழந்தை நட்சத்திரமாக தற்போது படங்களில் நடித்த வருகிறார்.மீனாவும், வித்யாசாகரும்  திருமணம் செய்து 13 வருடங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென வித்யாசாகர் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

இதற்கு முக்கிய காரணம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது அதை மாற்ற டாக்டர்கள் அறிவுரை கொடுத்தனர் அதற்ககுள்ளயே வித்தியாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இப்படி இருக்கின்ற நிலையில்  நடிகை மீனா ஆரம்பத்திலேயே வித்தியாசாகரை நிராகரித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். நடிகை மீனாவுக்கு அவரது வீட்டில் உள்ள பெற்றோர்கள் திருமண விஷயத்தில் ஈடுபட்டு வந்தனர் .

அப்பொழுதுதான் வித்யாசாகருக்கும், மீனாவிற்கும் நல்ல பொருத்தம் இருப்பது அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. ஆனால் மீனா வேண்டாம் என மறுத்துள்ளார். உடனே அவரது அத்தை நல்ல மாப்பிள்ளையை நீ மிஸ் செய்ய போகிறாய் எனக்கூறி அவருடைய நல்ல குணங்களை எடுத்து சொல்லி பேசி உள்ளார். பிறகு மீனா வித்யாசாகர் உடன் பழகி பேசி பின் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்.

 

Leave a Comment