நடிப்பிற்காக சம்பளத்தை உயர்த்தும் நடிகர்கள் மத்தியில் ஏன் அஜித் மட்டும் சம்பளம் உயர்த்தாமல் தனித்து நிற்கிறார் தெரியுமா.? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்.

ரஜினி, கமல் ஆகியவர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு  சிறப்பான படங்களை கொடுத்து வருபவர்கள் என்னமோ விஜய் மற்றும் அஜீத் தான். தற்போது இருக்கும் இளம் தலைமுறை ரசிகர்கள் பலரும் அஜித், விஜய் ரசிகர்களாக இருப்பதால் அவர்களுக்கு பேரும், புகழும் பெரிதாகவே கிடைக்கின்றன.

மேலும் இவரது திரைப்படங்களை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அந்த காரணத்தினால் இவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெறுகின்றன. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அஜித், விஜய் பற்றி தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் இருவரைப் பற்றியும் சிறப்பாக கூறி இருந்தார். அவர் சொன்னது : அஜித்தை பற்றி பேசும்பொழுது அஜித் பெரிய அளவில் ஆடம்பரத்தை ஏற்காதவர் மேலும் விஜய், ரஜினிகாந்த சம்பளத்தை ஏற்றுவது போல அஜித் சம்பளத்தை விரும்பாமல் புகழ் கிடைத்தாலே போதும் என இருப்பார் பணம் முக்கியம் இல்லை என்பதை உணர்ந்து சம்பளத்தை அவர் மனத் திருப்தியுடன் சம்பளத்தை வாங்குவார்.

வலிமை படம் OTT தளத்தில் வெளியாகுமா என கேட்டதற்கு நிச்சயம் இந்த திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் தியேட்டர் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் நவம்பரில் வலிமை வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. அந்த காரணத்தினால் தியேட்டரில் தான் வலிமை வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதிலும் படக்குழு அதைத்தான் விரும்புகிறது என கூறினார் மேலும் அஜித் அவர்களின் ரசிகர்கள் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால் தியேட்டரில் தான் வெளியிட முடிவு எடுத்து உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Comment