அஜித் யாரையும் நம்பாமல்.. தனிக்காட்டு ராஜா போல வர என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் அண்மைக்காலமாக தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த  தொடர்ந்து ஆக்சன் மற்றும் சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதனாலையே இவரது படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றனர்.

இப்பொழுது தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் அஜித் வெற்றிகரமாக நடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தையும் வேற லெவலில் கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டம் போட்டு இருக்கின்றனர்.

ரசிகர்கள் அஜித்தை பெரிய அளவில் கொண்டாடினாலும், அஜித் அவர்களை பார்ப்பதில்லை, அவரை அவ்வளவு எளிதில் யாரும் பார்க்கவும் முடியாது அவர் யாருக்கு உதவி செய்தாலும் அது வெளியே எதுவும் தெரியாது இப்படி அவர் இருக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள பழசை தூசி தட்டி பார்த்தால் பல உண்மைகள் வெளி வருகின்றன.

அதில் சில விஷயங்களை பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராஜ்கிரன் ஒரு படத்தில் அஜித்துக்கு அப்பாவாக நடித்தார் அன்றிலிருந்து அஜித் அவரை உண்மையான அப்பாவாகவே பார்த்தாராம் இரு குடும்பக்களும் ஒன்றோடு ஒன்றாக பல வருடங்கள் பழகி வந்தார்கள் திடீரென ராஜ்கிரண் அஜித்திடம் உங்களை வைத்து ஒரு படம் பண்ண ஆசைப்படுகிறேன் என்ற கேட்டதும்..

இதற்காக தான் என்னிடம் பழகினீர்களா என்று மனதில் நினைத்துக் கொண்டு அன்றிலிருந்து அவரை விட்டு விலகினாராம் அதன் பிறகு பெரும்பாலும் சினிமா பிரபலங்களை நம்புவதில்லை.. மேலும் இவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூட இவருடன் பழகி பயனடைந்துள்ளனர் எல்லாம் ஒரு கட்டத்தில் உணர்ந்து தான் அதிகமாக நட்பு கொள்ளாமல் மேலோட்டமாக அஜித் போகிறாராம்.. ஆனால் ரசிகர்களை மட்டும் அவர் ஆரம்பத்தில் எப்படி பார்த்தாரோ அதே போலவே தான் இப்பொழுதும் பார்க்கிறாராம்..

Leave a Comment