விஜய் நடிப்பில் உருவாகிய “சர்க்கார்” திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? பல வருடங்கள் கழித்து கசிந்த தகவல்.

ஏ ஆர் முருகதாஸ் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை இன்னும் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் மேலும் தோல்வியை கொடுக்காத இயக்குனராக வலம் வருகிறார் .  ஏ ஆர் முருகதாஸ் ஆரம்பத்தில் அஜித்தை வைத்து தீனா என்ற படத்தை கொடுத்ததை தொடர்ந்து படிப்படியாக டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுத்து அசத்தியவர்.

அந்த வகையில் விஜய் ரஜினியை தொடர்ந்து தற்போது டாப் நடிகர்களை வைத்து படத்தை எடுக்க அதிகம் ஆசைப்படுகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஏ ஆர் முருகதாஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் வைத்து சர்க்கார் என்ற மாபெரும் படத்தை கொடுத்திருந்தார்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அதிக நாட்கள் ஓடியது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி காட்டியது மேலும் விஜய் கேரியரில் இது ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது இந்த படத்தின் முக்கியக் கதை ஒரு ஒட்டு மொத்த அரசியல் அமைப்பை மற்றும் என்பதை குறிக்கும் வகையில் இருந்தது.

இதில் தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் விஜய். இந்த நிலையில் இந்த படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தின் கதையை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் தான் கூறி உள்ளார்.

ஆனால் அப்போது ரஜினியின் மற்ற படங்களில் நடித்து வந்த காரணத்தினால் இந்த படத்தை அவர் தவற விட்டார். அதன் பிறகு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜயிடம் இந்த கதையை சொல்லி அவரை கமிட் செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment