விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அபூர்வமாக வெளிவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் விடுதலை நடிகர் சூரி நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் இடையே ஏக போக வரவேற்பு பெற்றுவிட்டது. மேலும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வெற்றி மாறனிடம் பலரும் கேட்டு வரும் விஷயம் என்றால்.

அது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளிவரும் என்பது பற்றி தான் கேள்வி எழுப்பி வந்தனர்.அதற்கும் பதில் அளித்து வந்த வெற்றிமாறன் படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்கவில்லை அது மட்டும் எடுத்து விட்டால் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது எனவும் கூறி வந்தாராம்.

சூரிக்கு எவ்வளவு மாஸாக இந்த திரைப்படத்தில் இருந்ததோ அதே அளவிற்கு விஜய் சேதுபதிக்கும் இருந்தது அதேபோல் விஜய் சேதுபதி நடித்திருக்கும் பெருமாள் என்கிற வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க வேண்டும் என ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஆம் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் தான் வெற்றிமாறன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளாராம் மேலும் அந்த நடிகரும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை கிராமத்து கதைகளை மையமாக வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா அவர்கள் தான் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்ததாம்.

soori
soori

ஒரு சில காட்சிகள் மட்டுமே இவர் நடித்தாராம் காடு,மலை என அனைத்திலும் ஷூட்டிங் நடந்ததால் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதால் அவரே இந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது அதன் பின்பு தான் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் எனவும் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Leave a Comment