ஊமை விழிகள் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.! 7 நாள் கால் சீட் கேட்டதற்கு 70 நாள் நடித்துக் கொடுத்த உன்னதமான நடிகர் விஜயகாந்த் தான்.! உண்மையை போட்டு உடைத்த பிரபலம்..

ஒரு காலகட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே கலைப்படம் எடுப்பவர்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் அந்த சூழ்நிலையை சுக்குநூறாக நொறுக்கியவர்தான் ஆர் அரவிந்தராஜ் கூட்டணி. இவர்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்திலேயே டெக்னாலஜியில் மிரட்டி ஊமை விழிகள் என்ற திரைப்படத்தை கொடுத்தவர்கள்.

இதைத் தாண்டி விஜயகாந்த் நடிப்பில் உருவாகிய உழவன் மகன், கருப்பு நிலா என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் அரவிந்த் ராஜ். இவர் தற்பொழுது வரலாற்று தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் வாழ்க்கை வரலாறு என படத்தை இயக்கி வருகிறார். ஊமை விழி திரைப்படத்தை இன்னும் பலரும் வியந்து பார்க்கிறார்கள் அதற்கு காரணம் ஆபாவாணமன் சார் தான்  இயக்குனர் அரவிந்த்ராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறுகையில் நாங்கள் அனைவரும் திரைப்படக் கல்லூரியில் தான் நண்பர்களாக மாறினோம்.

அப்பொழுதுதான் என்னை அவர் இயக்குனராக ஆக்கினார் அந்த காலகட்டத்தில் அவர் கையில் பணமே இல்லாத சூழ்நிலை சின்ன பட்ஜெட் படமாக தான் நாங்கள் ஊமை விழி திரைப்படத்தை தொடங்கினோம். அதுமட்டுமில்லாமல் ஊமை விழிகள் திரைப்படத்தில் முதலில் சிவகுமார் சாரை தான் நடிக்க வைக்க நினைத்தோம் ஆனால் அது முடியாமல் போனது அதன் பிறகு தான் விஜயகாந்த் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

அதற்கு காரணம் சந்திரசேகர் தான் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் அவர்தான் ஒப்பந்தமானார் பின்னர் போலீஸ் அதிகாரி தீனதயாளன் ரோலுக்கு விஜயகாந்த் கிடைத்தார். 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் விஜயகாந்த் அவர்களிடம் ஏழு நாள்தான் கால்ஷீட் கேட்டிருந்தோம் ஆனால் விஜயகாந்த் சார் 70 நாட்களுக்கு மேல் நடித்துக் கொடுத்தார். அது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட தயாரிப்பாளராகவும் இந்த திரைப்படத்தை முடித்து  கொடுக்க உதவினார்.

இந்தப் படத்தை பல சவால்களை கடந்து தான் எடுத்தோம் அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் படத்தை சென்சாரில் தடை செய்தார்கள். இதை ஏன் தடை செய்தார்கள் எதற்காக தடை செய்தார்கள் என்று யாருக்குமே தெரியாது பின்பு மும்பைக்கு சென்றோம் ஆனால் அங்கும் பலன் இல்லை அங்கும் தடை செய்தார்கள். அதன் பிறகு தான் ட்ரிப்பியூணளுக்கு போனோம். அங்குதான் ஊமை விழி திரைப்படத்திற்கு தடை விலகியது 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் வெளியாகி எங்கள் அனைவருடைய வாழ்க்கையில் வசந்தம் வீசியது.

இப்படி ஊமை விழிகள் திரைப்படத்தில் இருந்த இன்னல்களையும் கஷ்டங்களையும் சவால்களையும் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment