பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் சஞ்சீவ் சந்தித்த முதல் நண்பர் யார் தெரியுமா.? சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.?

அண்மையில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மக்களின் பேராதரவைப் பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைகளில் இருந்து போட்டியாளர்கள் கலம் இறங்கின அந்த வகையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் பின்பு வைல்டு கார்டு என்ட்ரி ஆக 3 போட்டியாளர்களும் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் இறுதியில் ராஜு பிக் பாஸ் பைனலில் வெற்றிபெற்றார்.

அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் பிரியங்கா உள்ளார் மேலும் மூன்றாவது இடத்தைப் பாவணி பிடித்துள்ளார். இந்த பிக் பாஸ் சீசன் முடிவடைந்த பிறகு போட்டியாளர்கள் பலரும் அவர்களுடன் பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய போட்டியாளர்களை சந்தித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களது ரசிகர்களிடையே நேரலையில் உரையாடி வருகின்றன.  அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்தவர் சஞ்சீவ் இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் விஜய்யுடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நேர்மையாக விளையாடி மக்களின் மனதைக் கவர்ந்தவர் என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் சில வாரங்களிலேயே மக்களின் குறைந்த ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் சஞ்சீவ் இடம் கூறியதை சஞ்சீவ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த வகையில் “பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லா இருந்தது உனக்காக தான் நான் பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்தேன். நீ எப்படி பிக் பாஸ் வீட்டிற்கு போனியோ அப்படியே நல்ல பேரோட திரும்பி வெளியே வந்தது எனக்கு சந்தோஷம்” என தளபதி விஜய் சஞ்சீவிடம் கூறியுள்ளாராம்.

Leave a Comment