காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா.? கடைசி நேரத்தில் எஸ்கேப்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது வசூல் ரீதியாக அடித்து நொறுக்குகிறது இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து தென்னிந்தியத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகையான நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர்களும் இடம் பெற்று இருந்தனர்.

இந்த படத்தில் காதல், ரொமான்டிக், காமெடி என அனைத்தும் சிறப்பாக இருக்க இந்த படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க கூட்டம் கூட்டமாக போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தற்போது வரையிலும் 55 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இந்த திரைப்படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பதால் வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி ஒரு புதிய சாதனை படைக்க இருப்பதாக கூறப்படுகிறது இதனால் காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு செம உற்சாகத்தில் இருக்கிறதாம். இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்சேதுபதிக்கு இந்தப் படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்துள்ளது. அதே சமயம் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் படம் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படதில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒருவர் தான் என கூறப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதையை சிவகார்த்திகேயனை மனதில் வைத்துதான் எழுதினாராம் ஆனால் சிவகார்த்திகேயன் இதில் இருந்து நைசாக கழன்று விட பின் இந்த வாய்ப்பு விஜய்சேதுபதிக்கு சென்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு தகவல் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

Leave a Comment

Exit mobile version