வெற்றி மாறனை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் மற்றும் ஹீரோயின் யார் தெரியுமா.! ஷாக்கான ரசிகர்கள்.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து பிறகு டாப் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து அந்த படங்களில் நடிக்க உள்ளதால் தற்போது அவருக்கு தொடர் வெற்றி திரைப்படங்களாக அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இவர் அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.அதைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக எந்த இயக்குனர் படத்தில் இணைவார் என்பது கேள்வி குறியாக இருந்து வந்த நிலையில் அவர் சிறுத்தை சிவாவுடன் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் சிறுத்தை சிவா அண்ணாத்தா படப்பிடிப்பிற்கு முன்பாகவே சூர்யாவுடன் ஒரு கதையைச் சொல்லி இருந்தாராம் ஆனால் அந்தப்படம் திடீரென ட்ராப் ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நேரம் இருந்தால் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க முனைப்பு காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழு தீர்மானித்துள்ளது இருப்பினும் அதை அதிகாரப்பூர்வமாக கூறாமல் சைலண்டாக வைத்துள்ளது.

இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் டிரெண்டிங்கில் வலம் வருகிறது. எது எப்படியோ சூர்யாவுக்கு நல்ல ஒரு ஹிட் படம் அமைந்தால் போதும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment