சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் போலீசாக நடித்தவர் யார் தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் என்ற திரைப்படமானது அமேசானில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீலாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படமானது இருளர் சமுதாயத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர்களை சில போலீஸ் அதிகாரிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் அவர்களை எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதை குறித்தும் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இருளர் சமுதாயத்தின் மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர்களை சித்திரவதை செய்வது போன்ற காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் அவர்களை நீதிமன்றத்தின் மூலமாக சூர்யா காப்பாற்றுவது இத்திரைப்படத்தின் கதையாகும்.

அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த போலீஸ் அதிகாரி உண்மையாகவே ஒரு காவல்துறை அதிகாரி தான் இவர் திரைப் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவர் ஒரு நடிகர் மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறனை வெளிக்காட்டி உள்ளார். மேலும் இவர் சினிமாவில் இருந்த ஆர்வத்தின் காரணமாக தான் தன்னுடைய போலீஸ் வேலையை உதறித் தள்ளி உள்ளார்.

அந்தவகையில் இவர் போலீஸ் ட்ரெய்னிங்கில் என்னென்ன கொடுமைகள் நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் டானகாரன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார் இவ்வாறு உருவான இத்திரைப்படம் மிக விரைவாக ரிலீசாக உள்ளது.

இவ்வாறு ஜெய்பீம் திரைப்படத்தில் போலீஸ் கேரக்டருக்கு தமிழ் நல்ல பொருத்தமாக இருப்பார் என்ற காரணத்தினால் இயக்குனர் ஞானசேகர் அவர்கள் இவரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் மேலும் இவர் டானகரன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

taanakaran-1
taanakaran-1

Leave a Comment