பொன்னியின் செல்வன் 2 இசை வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா.? வெளியான சூபர் தகவல்…

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்தாண்டு உருவான பொன்னியன் செல்வன் திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரையில் வெளியாக காத்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், என பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர்.

கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது அந்த வகையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இடம் இடம் பெற்ற அக நக பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த சில தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

அதாவது இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ஆகிய இரண்டு மார்ச் 29ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருமே கலந்து கொண்டு உள்ளார்கள் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று இதனை தொடர்ந்து தற்போது ரஜினி அவர்கள் தன்னுடைய படங்களில் பிசியாக இருந்து வருவதால் அவரால் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

ஆகையால் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் மட்டும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள போகிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment