பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் அடுத்து அதிரடியாக களம் இறங்கும் பெண் போட்டியாளர் யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பேராதரவைப் பெற்று சீசன் சீசனாக சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அந்த பிக் பாஸ் போட்டியாளர்களில் சில முக்கிய போட்டியாளர்களை வைத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்யில் பிக் பாஸ் அல்டிமேட் என 24 மணி நேரமும் லைவ்வாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி தற்போது பல வாரங்கள் கடந்து விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் பிக் பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் அவரைத் தொடர்ந்து தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சென்ற வாரத்தில் இருந்து நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வேற லெவலில் மக்கள் மற்றும் போட்டியாளர்களை அதிகம் கவர்ந்து இழுத்துள்ளது. இதனிடையே இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சென்ற வாரம் இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தன.

ஆம் அதில் முதலாவதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எலிமினேஷன் இல் வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதீஷ் போன்ற இரண்டு பிரபலங்களும் தற்போது பிக் பாஸ் வீட்டினுள் இணைந்துள்ளனர். இந்த நிலையில் மற்றொரு பெண் போட்டியாளரும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

losliya-1
losliya-1

அதனையடுத்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த லாஸ்லியா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்   வைல்டு கார்டு என்ட்ரி ஆக நுழைய உள்ளதாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல்கள் வெளியாகின ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என சரியாக தெரியவில்லை எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment